என் மலர்
நீங்கள் தேடியது "Request For Eviction"
- ரயில் நிலையம் முன்பு தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- திருப்பூர் மாவட்டம் சூளகிரியில் தமிழர்கள் மீது இந்திக்காரர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தியதை கண்டித்து நடந்தது
தஞ்சாவூா்:
தஞ்சை ரயில் நிலையம் முன்பு தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வைகறை தலைமை தாங்கினார்.
நிர்வாகிகள் தென்னவன், பழ. ராஜேந்திரன், துரை. ரமேசு, தனசேகர், புண்ணியமூர்த்தி, ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ் தேசிய பேரியக்க தலைவர் மணியரசன் கலந்துகொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் மாவட்டம் சூளகிரியில் தமிழர்கள் மீது இந்திக்காரர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், தமிழக அரசு வெளி மாநிலத்தவரை வெளியேற்றக் கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதில் நிர்வாகிகள் ராமு, முனியாண்டி, ஜெயக்குமார், கருணாநிதி, காமராசு, வக்கீல் செல்வநாயகம், நாம் தமிழர் கட்சி நிர்வாகி மாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






