search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Religious feeling"

    பொதுமக்களிடம் ஜாதி, மத ரீதியான பகைமை உணர்வை தூண்டுவது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களின் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ராமநாதபுரம் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ், போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா ஆகியோர் வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 8.9.2018-ம் தேதி முதல் சட்டம் ஒழுங்கு மற்றும் அமைதியை பேணும் பொருட்டும், இரு பிரிவு சமூகத்தைச் சேர்ந்தவர்களும், அவரவர் நிகழ்ச்சிகளை எந்தவித சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படாமல் நடத்தவும் மாவட்டம் முழுவதும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, நெறிமுறைகள் வரையறுக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.

    சமீபகாலமாக, 14.10.2018-ம் தேதியன்று முதுகுளத்தூர் மற்றும் பார்த்திபனூர் பகுதிகளை சேர்ந்த சில நபர்கள், குறிப்பாக இளைஞர்கள் பிற சமுதாய மக்களை தரக்குறைவாகவும், இழிவாகவும் பேசியும், சமூக வலைதளங்களில் காணொளி செய்தியாக வெளியிட்டுள்ளது தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக, முதுகுளத்தூர் மற்றும் பார்த்திபனூர் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தகாத பதிவுகளை வெளியிட்ட நபர்கள் சட்டப்படி கைது செய்யப்பட்டு, அவர்கள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    சில வி‌ஷமிகள் செய்யும் தேவையற்ற, சட்டத்திற்கு புறம்பான செயல்களினால் அமைதியாக வசித்து வரும் பல்வேறு சமுதாய மக்களிடையே பிரச்சினை ஏற்பட்டு, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுவதுடன், சட்டம் ஒழுங்கும் பாதிப்படையும் வாய்ப்புள்ளது.

    இதுபோன்று வரும் வதந்திகளை குறுஞ்செய்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.

    மேலும் தவறாக அனுப்பும் குறுஞ்செய்திகளை யாரும் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என்றும், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வளைதளங்களில் குழு தலைவர் அந்த செய்திகளையும் அந்த நபரையும் குழுவில் இருந்து நீக்கம் செய்வதுடன் அதுபற்றி காவல் துறைக்கு புகார் செய்ய வேண்டும்.

    இவ்வாறு தவறும் பட்சத்தில் குறுஞ்செய்திகளை பகிர்பவர்கள் மீதும், அந்த குழு தலைவர் மீதும் சட்டத்திற்கு புறம்பான செயல்கள் செய்வதற்கு உடந்தையாக இருந்ததாகவும் கருதப்பட்டு அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகின்றது.

    பொதுமக்களிடம் ஜாதி, மத ரீதியான பகைமை உணர்வை தூண்டுவது, பல்வேறு சமுதாய மக்களிடம் நிலவி வரும் ஒற்றுமை மற்றும் பொது அமைதியை சீர்குலைப்பது, சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவது போல் உணர்வை தூண்டுவது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களின் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேற்கண்டவாறு அந்த எச்சரிக்கை செய்தியில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
    மதஉணர்வை தூண்டும் வகையில் பேசிய கிறிஸ்துவ போதகர் மோகன் சி.லாசரஸ் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    கோவை:

    தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள நாலுமாவடியை சேர்ந்தவர் மோகன் சி.லாசரஸ்.

    பிரபல கிறிஸ்தவ போதகரான இவர் ‘ஏசு விடுவிக்கிறார்’ என்ற பெயரில் கிறிஸ்தவ ஊழியம் செய்து வருகிறார். இவர் ஒரு கிறிஸ்தவ கூட்டத்தில் பேசும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் மோகன் சி.லாசரஸ் பேசியதாவது:-

    இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் சாத்தான்களின் இருப்பிடம் அதிகமாக உள்ளது. வட இந்தியாவை எடுத்துக்கொண்டால் பிர்லா மந்திர், அமிர்தசரஸ் பொற்கோவில் என ஆங்காங்கே ஒரு சில இடத்தில் தான் கோவில்கள் இருக்கும். ஆனால் தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் கோவில்கள் தான் இருக்கின்றன. இந்த கோவில்கள் சாத்தான்களின் அரண்கள்.

    தமிழகத்தில் உள்ளது போல சாத்தான்களின் அரண் எங்குமே கிடையாது. இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் இந்த அளவுக்கு சாத்தான் தன்னுடைய எல்லையை கட்டுப்படுத்தி வைத்துள்ளது. ஏன் இவ்வளவு வலுவாக உள்ளது என்பதற்கான காரணத்தை கடவுள் எனக்கு வெளிப்படுத்தி உள்ளார்.

    சமீபத்தில் காஞ்சி சங்கர மடத்திற்கு செல்லக்கூடிய வலிமையை கடவுள் கொடுத்தார். அங்கு இரண்டு பேர் உள்ளனர். பட்டுசேலை, பட்டு வேட்டியை எடுத்து யாகம் செய்து அவர்களை வணங்குகின்றனர். மனிதர்கள், மனிதர்களையே வணங்கும் பழக்கம் தான் உள்ளது. இதுபோன்ற நிறைய ரகசியங்களை தெரிந்து கொள்ள முடிந்தது என பேசி உள்ளார்.

    இந்த கூட்டம் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்றது என கூறப்படுகிறது. தற்போது சமூக வலை தளங்களில் இந்த வீடியோ பரவி வரும் நிலையில் மோகன் சி.லாசரஸ் மீது நடவடிக்கை எடுக்கும்படி இந்து அமைப்புகள் சார்பில் பல இடங்களில் போலீஸ் நிலையயங்களில் மனு அளிக்கப்பட்டு வருகிறது.

    கோவை மாவட்டம் சூலூரை அடுத்த அரசூரை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி பிற்ப்படுத்தப்பட்டோர் பிரிவு வடக்கு மாவட்ட தலைவர் முருகேசன்(43) என்பவர் சூலூர் மற்றும் கருமத்தம்பட்டி போலீஸ் நிலையங்களில் ஒரு புகார் கொடுத்தார். அதில் மதஉணர்வை தூண்டும் வகையில் பேசிய மோகன் சி.லாசரஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.

    இதேபோல பொள்ளாச்சியை சேர்ந்த விஷ்வ இந்து பரி‌ஷத் மாவட்ட துணை செயலாளர் மனோசங்கர்(35) என்பவரும் பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் மோகன் சி.லாசரஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தார்.

    இந்த புகார்களின் பேரில் மோகன் சி.லாசரஸ் மீது இந்திய தண்டனை சட்டம் 153(ஏ)- மத உணர்வை தூண்டும் வகையில் பேசி சமுதாயத்தினர் இடையே விரோதத்தை ஏற்படுத்துதல், 295(ஏ)- பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ×