search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "relieves respiratory problems"

    • அனைவருக்கும் யோகாசனம் செய்யும் பழக்கம் இருக்கும்.
    • தினமும் காலையில் யோகா செய்ய வேண்டும்.

    சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் யோகாசனம் செய்யும் பழக்கம் இருக்கும். யோகா என்பது நம் உடல், மனம், உணர்ச்சிகள் மற்றும் ஆன்மாவை ஒருங்கிணைக்கும் ஒரு கலை ஆகும். நம் உடலில் ஏற்படும் மன அழுத்தத்தை குறைத்து மன நிலையை அமைதியாக வைத்திருக்க செய்ய கூடிய பயிற்சியாகும். அதுமட்டுமில்லாமல் நம் உடலில் உள்ள சோர்வை நீக்கி புத்துணர்ச்சியாக வைக்கவும் யோகா உதவுகிறது. எனவே ஒருவர் தினமும் யோகா செய்வதன் மூலம் அவர் உடலில் என்னென்ன நன்மைகள் உண்டாகுகிறது என்பதை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

    மன அழுத்தத்தை குறைப்பதற்கு பெரும்பாலான மக்கள் யோகாசனத்தை தேர்வுசெய்து வருகிறார்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட துன்பங்கள் உங்கள் மனதில் மன அழுத்தத்தை ஏற்படுத்தினால் தினமும் யோகா செய்து மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம்.

    உங்கள் உடலில் மற்றும் தலையில் உள்ள உஷ்ணத்தை சரியான அளவில் வைத்துக்கொள்ள யோகாசனம் மிகவும் உதவுகிறது. கோடை காலத்தில் ஏற்படும் உடல் உஷ்ணத்தை தடுப்பதற்கு தினமும் காலையில் யோகா செய்ய வேண்டும்.

    உங்கள் மனதில் உள்ள ஏராளமான பதட்டத்தை குறைப்பதற்கு யோகா மிகவும் உதவுகிறது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. எனவே தினமும் யோகா செய்வதன் மூலம் மனதில் ஏற்படும் பதட்டத்தை குறைக்கலாம்.

    தினமும் யோகா செய்வதன் மூலம் இதயத்திற்கு சரியான அளவில் ரத்த ஓட்டம் செல்கிறது. மேலும் இதயத்தில் உள்ள திசுக்களின்

    ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது. எனவே இதயத்தில் பிரச்சினை உள்ளவர்கள் தினமும் யோகா பயிற்சி செய்தால் அவர்களின் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

    இரவில் தூக்கம் வராதவர்கள் அல்லது இரவில் திடீரென்று விழிப்பவர்களுக்கு யோகா ஒரு சிறந்த தீர்வாகும். எனவெ தூக்கம் வராதவர்கள் தினமும் ஒரு 30 நிமிடம் யோகா பயிற்சி செய்தால் போதும் தூக்கமின்மை பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.

    ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் தினமும் யோகா செய்வதன் மூலம் ஆஸ்துமா பிரச்சினையை குறைக்கலாம். மேலும் தலைசுற்றல், மயக்கம் போன்ற பிரச்சினை உள்ளவர்கள் தினமும் யோகா பயிற்சி மேற்கொண்டால் மயக்கம் வராமல் தடுக்கலாம்.

    ×