search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Reham Khan"

    இம்ரான்கான் பாகிஸ்தான் ராணுவத்தின் கைப்பாவையாக செயல்படுவதாக அவரது முன்னாள் மனைவி ரெகம்கான் தெரிவித்துள்ளார். #Pakistan #ImranKhan #RehamKhan
    இஸ்லாமாபாத்:

    காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதையொட்டி இந்தியா மட்டும் இன்றி அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்தன. எனினும் பாகிஸ்தான் அரசு இது குறித்து கருத்து தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இதுபற்றி பேசிய அந்த நாட்டின் பிரதமர் இம்ரான்கான் புலவாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக கூறும் இந்தியா அதற்கான ஆதாரத்தை வழங்க வேண்டும் என ஆவேசமாக கூறினார். தாக்குதல் நடந்த 5 நாட்களுக்கு பிறகு வாய் திறந்ததற்காக இம்ரான்கான் விமர்சனங்களுக்கு உள்ளாகினார்.

    இந்த நிலையில், இம்ரான்கான் பாகிஸ்தான் ராணுவத்தின் கைப்பாவையாக செயல்படுவதாகவும், புலவாமா தாக்குதல் குறித்து பேச ராணுவத்தின் உத்தரவுக்காக காத்திருந்ததாகவும் அவரது முன்னாள் மனைவி ரெகம்கான் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில், “அவர் ஒரு நாளும் தனக்கு கற்பித்த பாடங்களில் இருந்து மீறுவதில்லை. ராணுவம் எதற்கு அனுமதி அளித்ததோ அந்த அளவே அவர் பேசி உள்ளார்” என கூறினார்.

    மேலும் அவர், “இந்தியாவிலோ அல்லது உலகின் பிற நாடுகளிலோ இதுபோன்ற பெரிய தாக்குதல்கள் எங்கு நடந்தாலும் பாகிஸ்தான் பிரதமர் அதற்கு உடனடியாக கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து” என்றார்.

    ரெகம்கானை திருமணம் செய்துகொண்டதை 2015-ம் ஆண்டு ஜனவரி 6-ந் தேதி உறுதி செய்த இம்ரான்கான், அதே ஆண்டு அக்டோபர் மாதம் 30-ந் தேதி அவரை விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரேஹம் கான் அளித்த பேட்டியில், இம்ரான் கானின் சுயரூபம் இதன்பிறகே வெளிப்படும் என தெரிவித்துள்ளார். #ImranKhan #RehamKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரேஹம் கான் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:

    ‘பாகிஸ்தானில் நிலவும் ஊழல் குறித்து நீங்கள் வெளியிட்ட புத்தகம் இம்ரான் கானை தாக்கி எழுதப்பட்டது என்ற குற்றச்சாட்டுக்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

    இதுபோன்ற குற்றச்சாட்டுகளை நான் கண்டுகொள்வதில்லை. அந்த சமயங்களில் நான் காது கேளாதவள் ஆகிவிடுவேன். இந்த புத்தகத்தில் இருக்கும் விஷயங்கள் மக்கள் அறிந்துகொள்வதற்கான சரியான நேரம் இது என முடிவு செய்தேன்., எனவே புத்தகத்தை வெளியிட்டேன். இம்ரான் கானிடம் எப்போதும் ஒழுக்கத்தை எதிர்ப்பார்க்க முடியாது. அவர் தற்போது அதிக செல்வாக்குடன் இருப்பதால், இனி அவரது சுயரூபம் வெளிப்படும்.

    உங்கள் புத்தகத்தில் இருப்பது பொய் என கூறுகிறார்களே?

    ஒரே ஒரு செய்தி நிறுவனம் தவிர அனைவரும் 200 சதவிகிதம் உண்மை என்றே கூறியிருக்கிறார்கள். என்னை பொருத்தவரையில், இம்ரான் கான் அரசியல்வாதி மட்டுமே.

    நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?

    நான் எது செய்கிறேனோ அதுவே அரசியல்.. அரசியல் என்பது பிரதமர் ஆவதோ, அல்லது அமைச்சராவதோ அல்ல. எனக்கு அதில் விருப்பம் இல்லை. நீதியையும், சமதர்மத்தையும் உருவாக்குவதே அரசியல் என நான் கருதுகிறேன். மார்டீன் லூதர் கிங் போல, காந்தி போல, நெல்சன் மண்டேலா போல புதிய தலைமுறை தலைவர்களை என்னால் உருவாக்க முடியும். அப்படி இம்ரான் கானும் இருப்பார் என நம்பித்தான் நாம் அவருக்கு வாக்களித்தோம் ஆனால், அவரும் சாதாரண அரசியல் தலைவர்களின் வழியையே பின்பற்றுகிறார்.’

    இவ்வாறு ரேஹம் கான் தெரிவித்துள்ளார். #ImranKhan #RehamKhan
    பாகின்தானில் அடுத்து ஆட்சியமைக்க உள்ள இம்ரான் கானுக்கு சொந்த அறிவுத்திறன் கிடையாது. ராணுவத்தின் ஊதுகுழலாக செயல்படுவார் என்று முன்னாள் 2-வது மனைவி பேட்டியளித்துள்ளார். #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காவிட்டாலும் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது. இதனால் உதிரி கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க இம்ரான்கான் முயற்சி செய்து வருகிறார்.

    இந்த நிலையில் அவரது முன்னாள் மனைவி இம்ரான்கானை கடுமையாக விமர்சித்து உள்ளார். இம்ரான்கான் முதலில் ஜெமீமா என்ற பெண்ணை திருமணம் செய்தார். அவரை விவாகரத்து செய்த பிறகு இங்கிலாந்தை சேர்ந்த ரெகம்கான் என்ற பெண்ணை திருமணம் செய்தார்.

    இவர், பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவர். 10 மாதங்கள் மட்டுமே இவர்கள் வாழ்ந்த நிலையில் அவரையும் இம்ரான்கான் விவாகரத்து செய்துவிட்டார்.

    இப்போது 3-வதாக தனது மத ஆலோசகரை இம்ரான்கான் திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் பாகிஸ்தான் தேர்தலையொட்டி 2-வது மனைவி ரெகம்கான் புத்தகம் ஒன்றை வெளியிட்டார். அதில், இம்ரான்கான் செயல்பாடுகள் குறித்து பல்வேறு புகார்களை கூறி இருந்தார்.

    இப்போது இம்ரான்கான் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் ஆகப்போகும் நிலையில் ரெகம்கான் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு இம்ரான்கான் பற்றி பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-


    தேர்தலில் இம்ரான்கான் வெற்றி பெறுவார் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும். ஆனால், அங்கு நேர்மையாக தேர்தல் நடந்திருந்தால் இம்ரான்கானால் வெற்றி பெற்றிருக்க முடியாது.

    அவரது கட்சி இந்த அளவு வெற்றி பெற்றிருப்பதற்கு ஒரு போதும் வாய்ப்பே இல்லை. குறிப்பாக அவரது கட்சி ஆட்சியில் இருந்த கைபர் பக்துன்கவா மாகாணத்தில் கூட அவருக்கு வெற்றி வாய்ப்பு இல்லாமல்தான் இருந்தது. அவரது அரசுக்கு அங்கு செல்வாக்கே இல்லை.

    இதேபோல் லாகூர், கராச்சி ஆகிய பகுதிகளில் மிக அனுபவம் வாய்ந்த வேட்பாளர்கள் எல்லாம் இம்ரான்கான் கட்சியின் அறிமுகம் இல்லாத வேட்பாளரிடம் தோற்று இருக்கிறார்கள். இது, நம்பும் படியாக இல்லை.

    இம்ரான்கான் ராணுவத்தின் வேட்பாளர். அவர் பிரதமராக வேண்டும் என்பது ராணுவத்தின் விருப்பம்.

    2013-ம் ஆண்டு நவாஸ் ஷெரீப்கூட ராணுவத்தின் ஆதரவால் தான் பிரதமர் ஆனதாக கூறப்பட்டது. இப்போது அதேபோல் இம்ரான்கானை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

    ராணுவம் ஏதோ ஒரு திட்டத்துடன் இம்ரான் கானுக்கு ஆதரவு அளித்துள்ளது. நவாஸ் ஷெரீப் இந்தியா தொடர்பாக எடுத்த கொள்கைகள் ராணுவத்துக்கு பிடிக்கவில்லை.

    அதேபோல் சீனா, பாகிஸ்தான் உறவு விவகாரத்திலும் நவாஸ் ஷெரீப் செயல்பாடு ராணுவத்துக்கு எதிராக இருந்தது.

    எனவேதான் இப்போது இம்ரான்கானை ராணுவம் முன்னிறுத்தி உள்ளது. இம்ரான்கான் ராணுவத்தின் ஆட்டுவிக்கும் பொம்மையாக செயல்படுவார்.

    முக்கியமான பிரச்சினைகளில் இம்ரான்கானுக்கு போதிய அறிவுத்திறன் கிடையாது. ராணுவம் என்ன சொல்கிறதோ அதைத்தான் இவர் செய்யப்போகிறார்.


    ராணுவம்தான் இம்ரான் கானை உருவாக்கி இருக்கிறது என்பதும் எனக்கு நன்றாகவே தெரியும். நான் அவரோடு மனைவியாக வாழ்ந்தவள். என்னிடம் பல வி‌ஷயங்களை இம்ரான்கான் கூறி இருக்கிறார். அவருக்கும், ராணுவத்துக்கும் உள்ள தொடர்பு பற்றி பல தகவல்களை என்னிடம் சொல்லி உள்ளார்.

    2008 தேர்தலில் ராணுவத்தினர் இம்ரான்கானுக்கு ஆதரவு காட்டவில்லை. இதன் காரணமாகத்தான் அந்த தேர்தலையே அவர் புறக்கணித்தார்.

    ஆனால், சமீப ஆண்டுகளில் ராணுவம் அவருக்கு ஆதரவாக இருந்தது. இதனால் ராணுவத்தைப்பற்றி அவர் பெருமையாக பேசிக் கொண்டு இருந்தார். ராணுவம் ஆதரவு இருப்பதால் தன்னால் நிச்சயம் பிரதமர் ஆக முடியும் என்று கருதினார்.

    இம்ரான்கானை ஆட்சிக்கு கொண்டு வரவேண்டும் என்பது கடந்த 2, 3 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்ட ஒன்று.

    இம்ரான்கானுக்கு இந்தியாவில் ஏராளமான நண்பர்கள் உண்டு. இந்தியாவை எதிரி போல் காட்டி அவர் பாசாங்கு செய்கிறார். ஆனால், உண்மையில் இந்தியாவோடு நல்லுறவுடன் இருப்பதையே அவர் விரும்புகிறார்.

    நான் அவரைப்பற்றி புத்தகம் வெளியிட்டது எனத சொந்த முடிவு. நவாஸ் ஷெரீப் கட்சி தூண்டுதல் தான் இதற்கு காரணம் என்று சொல்வது தவறானது.

    இவ்வாறு ரெகம்கான் கூறினார்.  #PakistanElections2018 #ImranKhan #RehamKhan
    ×