search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Recovery as a corpse"

    • திண்டிவனம் அடுத்த இனமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அருண்
    • வேலையை முடித்துவிட்டு இரவு வீட்டிற்கு வரவில்லை.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த இனமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அருண் (24)ஸ்வீட் மாஸ்டர் . இவர் கடந்த மாதம் 30 -ந்தேதி வீட்டிலிருந்து வேலைக்கு செல்வதாக சென்ற அவர் வேலையை முடித்துவிட்டு இரவு வீட்டிற்கு வரவில்லை. அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு போது செல் சுவிட்ச் ஆப் ஆகி இருந்ததது. இதனால் அவரது தந்தை அருண் வேலை செய்த இடம் மற்றும் பல்வேறு இடங்களில் தேடிய நிலையில் அவரை காணவில்லை என அவரது தந்தை மோசஸ் வெள்ளிமேடு பேட்டை போலீஸ் நிலையத்தில் கடந்த 30 -ந்தேதி இரவு புகார் அளித்தார்.

    புகாரின்பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில் திண்டிவனம் அருகே உள்ள விழுக்கம் ஏரிக்கரை வேப்ப மரத்தில் அழுகிய நிலையில் உடலில் பல்வேறு இடங்களில்ெவடடு காயங்களுடன் அருண் பிணமாக கிடந்தார். இது குறித்த தகவல் கிடைத்ததும் அங்கு சென்ற ரோசனை போலீசார் அருண் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அருண் தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது முன் விரோதம் காரணமாக யாரேனும் அவரை அடித்து கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கவிட்டார்களா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீயணைப்புத் துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர்
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ரெட்டிதோப்பு பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 28). நடன கச்சேரி குழு வில் டான்ஸ் மாஸ்டராக இருந்தார். இவர் நேற்று முன்தினம் தனது நண் பர்களுடன் வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லையில் ஆந்திர அரசு கட்டியுள்ள புல்லூர் தடுப் பணை அருகே உள்ள கனகநாச்சி அம்மன் கோவிலில் சாமி கும்பிட சென்றுள்ளார். பின்னர் கோவில் அரு கில் உள்ள தடுப்பணையில் குளிக்க சென்ற அவர் நீரில் மூழ்கிவிட்டார்.

    அவரை குப்பம் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையி னர் இணைந்து இரவு 7 மணி வரையில் தேடியும் கிடைக்க வில்லை. மேலும் இருட்டிவிட்டதால் தேடுதல் பணியை நிறுத்திவிட்டனர்.

    மீண்டும் நேற்று காலை தீயணைப்புத் துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பகல் 12 மணி அளவில் முரளி பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடல் குப்பம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப்பரிசோத னைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    ×