search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rainwater canal"

    • மழைநீர் கால்வாய் பணியில் போதுமான தடுப்புகள் அமைக்கப்பட வில்லை என்று தெரிகிறது.
    • போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராயபுரம்:

    திருவொற்றியூரை சேர்ந்தவர்கள் ஸ்ரீதேவி(40), கலைவாணி(30). உறவினர்களான இருவரும் மாற்றுத்திறனாளிகள். நேற்று மாலை அவர்கள் இருவரும் 3 சக்கர மொபட்டில் திருவொற்றியூர் நோக்கி சேர்ந்து சென்று கொண்டு இருந்தனர்.

    மண்ணடி, வடக்கு கடற்கரை ராஜாஜி சாலையில் சென்றபோது அங்கு சாலையோரம் இருந்த சேதம் அடைந்த பாதாள சாக்கடை மூடியின் மீது மொபட் மோதியது. இதில் ஸ்ரீதேவியும், கலைவாணியும் அருகில் நடைபெற்ற மழை நீர் வடிகால் பணிக்கு போடப்பட்டு இருந்த கான்கி ரீட் கம்பி மீது விழுந்தனர்.

    ஸ்ரீதேவிக்கு கை, நெற்றியிலும், கலைவாணிக்கு வயிற்றுப் பகுதியிலும் கம்பி குத்தி பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டுஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சகிச்சை பெற்று வருகிறார்கள். பாதாளசாக்கடை மூடி கடந்த சில நாட்களாக சேதம் அடைந்து உள்ளது. இதனால் அதில் கற்கள் மற்றும் செடிகளை போட்டு வைத்து உள்ளனர். அதன் மீது ஸ்ரீதேவி, கலைவாணி வந்த மொபட் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. மேலும் அருகில் நடைபெற்று வரும் மழைநீர் கால்வாய் பணியில் போதுமான தடுப்புகள் அமைக்கப்பட வில்லை என்று தெரிகிறது.

    இது குறித்து கொத்தவால் சாவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து நடந்த பின்னர் அந்த இடத்தில் புதிதாக பாதாள சாக்கடை மூடி போடப்பட்டு உள்ளது.

    • தலை மற்றும் வலது கை தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது.
    • வலது தொடையை இரும்பு கம்பி குத்திக்கிழித்துள்ளது.

    ஆலந்தூர் :

    சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலம் 175-வது வார்டுக்கு உட்பட்ட ஆதம்பாக்கம் கக்கன் நகர் மெயின் ரோடு, சிட்டி லிங்க் ரோடு ஆகிய சாலைகளில் பழைய மழைநீர் வடிகால்கள் உடைக்கப்பட்டு புதிய மழைநீர் வடிகால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக கக்கன் நகர் மெயின் ரோட்டில் மழைநீர் கால்வாய் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு, அடிப்பகுதியில் இரும்பு கம்பிகள் கட்டி, சிமெண்டு ஜல்லிக்கலவை போடும் பணி நடைபெற்று வருகிறது.

    ஆதம்பாக்கம் கக்கன் நகர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 33). என்ஜினீயரான இவர், தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய வீட்டு வாசலிலும் மழைநீர் கால்வாய்க்காக பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. ஆனால் பள்ளத்தை சுற்றிலும் தடுப்புகள் அமைத்து போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் திறந்த வெளியில் விடப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் வாசுதேவன் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குள் செல்ல முயன்றபோது, நிலை தடுமாறி மழைநீர் கால்வாய்க்கு தோண்டிய பள்ளத்தில் தலைகுப்புற விழுந்து விட்டார். அப்போது மழைநீர் கால்வாய் பணிக்காக போடப்பட்டு இருந்த இரும்பு கம்பி குத்தியதில் அவரது தலை மற்றும் வலது கை தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதுடன், வலது தொடையை இரும்பு கம்பி குத்திக்கிழித்தது. படுகாயம் அடைந்த வாசுதேவன் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இரும்பு கம்பி குத்திய இடங்களில் தையல் போடப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    மழைநீர் கால்வாய் பள்ளத்தில் வாசுதேவன் தவறி விழுந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

    மழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுவதாக சின்னத்திரை நடிகை கீதா தெரிவித்துள்ளார். #Suthanthiram
    போரூர்:

    வளசரவாக்கம் எஸ்.வி. எஸ். நகர் 6-வது தெருவில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்குள்ள தரைதள வீட்டில் சின்னத்திரை நடிகையான கீதா வசித்து வருகிறார்.

    நேற்று காலை குடியிருப்பு முன்பகுதியில் உள்ள மழைநீர் கால்வாயில் பச்சிளம் குழந்தை அழுதபடி கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

    குழந்தை கிடந்த கால் வாயின் மேற்பகுதி சிமெண்ட் சிலாப்பால் மூடப் பட்டு இருந்தது. இதனால் குழந்தையை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. சின்னத்திரை நடிகை கீதா தரையில் படித்தபடி அங்கு இருந்த ஆண் குழந்தையை மீட்டார்.

    குழந்தையின் கழுத்தில் அதன் தொப்புள் கொடி சுற்றியபடி காணப்பட்டது. பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையை பெற்றோர் வீசி சென்றிருப்பது தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து குழந்தையை நடிகை கீதா வெந்நீரில் குளிப்பாட்டி முதலுதவி செய்தார். இதுபற்றி அறிந்ததும் ஏராளமானோர் அங்கு குவிந்தனர்.


    சுதந்திர தினத்தில் குழந்தை மீட்கப்பட்டதால் அதற்கு ‘சுதந்திரம்’ என்று நடிகை கீதாவும், பொது மக்களும் பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

    தற்போது அந்த குழந்தை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக சேர்க்கப்பட்டுள்ளது. குழந்தை நலமாக இருக்கிறது.

    குழந்தையை மீட்டது குறித்து நடிகை கீதாவிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:-

    இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 7 வருடங்களாக மகள் ஷாலினியுடன் வசித்து வருகிறேன். நான் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தேன். தற்போது வாய்ப்பு ஏதும் இல்லாமல் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறேன்.

    நேற்று காலை 8 மணி அளவில் வழக்கம் போல் எங்கள் வீட்டிற்கு தினமும் பால் போடுபவர் வந்தார். அவர் வீட்டின் முன்பு உள்ள மழை நீர் கால்வாயில் இருந்து ஏதோ குழந்தை அழுகுரல் கேட்பதாக என்னிடம் கூறினார்.

    உடனடியாக நான் வெளியே ஓடி வந்து பார்த்தேன். இதற்குள் அங்கு அக்கம் பக்கத்தில் வசித்து வருபவர்கள் ஏராளமானோர் கூடி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர்.

    அங்கிருந்த யாரும் கால்வாயில் கிடந்த குழந்தையை எடுக்க முன் வரவில்லை. உடனடியாக நான் அந்த குழந்தையை மீட்டு தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டினேன்.

    நல்ல வேளையாக கால்வாயில் தண்ணீர் ஓட்டம் இல்லாததால் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. இல்லையென்றால் குழந்தை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டிற்கும்.

    அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த ஆண் குழந்தைக்கு சுதந்திரம் என்று நான் பெயர் சூட்டினேன். மேலும் எனது மகளுக்கு திருமணம் ஆகி கடந்த 7 வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லை.

    எனவே இந்த குழந்தை எங்களுக்கு கிடைக்குமேயானால் அதை நல்ல முறையில் வளர்ப்பதற்கு நானும் எனது மகளும் தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Suthanthiram
    சென்னை வளசரவாக்கத்தில் மழைநீர் கால்வாயில் அனாதையாக கிடந்த குழந்தையை மீட்ட நடிகை அக்குழந்தைக்கு சுதந்திரம் என்று பெயர் சூட்டினார். #Suthanthiram
    போரூர்:

    வளசரவாக்கம் எஸ்.வி. எஸ். நகர் 6-வது தெருவில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்குள்ள தரைதள வீட்டில் சின்னத்திரை நடிகையான கீதா வசித்து வருகிறார்.

    நேற்று காலை குடியிருப்பு முன்பகுதியில் உள்ள மழைநீர் கால்வாயில் பச்சிளம் குழந்தை அழுதபடி கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

    குழந்தை கிடந்த கால்வாயின் மேற்பகுதி சிமெண்ட் சிலாப்பால் மூடப்பட்டு இருந்தது. இதனால் குழந்தையை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. சின்னத்திரை நடிகை கீதா தரையில் படித்தபடி அங்கு இருந்த ஆண் குழந்தையை மீட்டார்.


    குழந்தையின் கழுத்தில் அதன் தொப்புள் கொடி சுற்றியபடி காணப்பட்டது. பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையை பெற்றோர் வீசி சென்றிருப்பது தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து குழந்தையை நடிகை கீதா வெந்நீரில் குளிப்பாட்டி முதலுதவி செய்தார். இதுபற்றி அறிந்ததும் ஏராளமானோர் அங்கு குவிந்தனர்.

    சுதந்திர தினத்தில் குழந்தை மீட்கப்பட்டதால் அதற்கு ‘சுதந்திரம்’ என்று நடிகை கீதாவும், பொதுமக்களும் பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

    தற்போது அந்த குழந்தை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளது. குழந்தை நலமாக இருக்கிறது.

    நேற்று மாலை குழந்தையின் உடல்நிலை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று கேட்டறிந்தார்.

    குழந்தை வீசப்பட்ட கால்வாய் அருகே உள்ள வீட்டில் கண்காணிப்பு கேமரா உள்ளது. அதனை வளசரவாக்கம் போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், குழந்தை வீசப்படும் நேரத்தில் பெரிய வேன் ஒன்று கால்வாயை மறைத்தப்படி வந்து நிற்கிறது.


    சிறிது நேரத்தில் அந்த வேன் சென்ற பிறகே அங்கு குழந்தை வீசப்பட்டிருப்பது தெரிந்தது. எனவே குழந்தையை வீசுவதற்காகவே கேமராவை மறைத்து வேன் நிறுத்தப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அந்த வேன் குறித்த தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

    மேலும் குழந்தையின் பெற்றோர் யார்? எதற்காக குழந்தையை வீசினர். கடத்தப்பட்டதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரை குழந்தையின் பெற்றோர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. #Suthanthiram
    ×