search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rabi crops"

    • பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2022-23 ஆம் ஆண்டு ராபி பருவ தோட்டக்கலைப் பயிர்களுக்கு காப்பீடு.
    • தோட்டக்கலை பயிர்கள், காப்பீடு தொகை, காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் 2022-23 (ராபி பருவம்) தோட்டக்கலைபயிர்களுக்கு காப்பீடு செய்யப்படுகிறது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவதுடு-

    திருப்பூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2022-23 ஆம் ஆண்டு ராபி பருவ தோட்டக்கலைப் பயிர்களுக்கு காப்பீடு செய்தல் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசிய மையமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் நடைபெற்று வருகிறது.தோட்டக்கலைப் பயிர்களை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதிகள் கீழ்கண்டவாறு தோட்டக்கலை பயிர்கள், காப்பீடு தொகை, காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கொத்தமல்லி- ரூ.620-31.12.2022, வெங்காயம்-ரூ.2217, மிளகாய்-ரூ.1220, தக்காளி-1487.50, தேதி-31-1-2023. வாழை-ரூ.4875.50,மரவள்ளி-1712.50, 28-2-2023 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    எனவே இதுவரை ராபி பயிர்களை காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் பொது சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்களை அணுகி இத்திட்டத்தில் காப்பீடு தொகை செலுத்தி பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ×