என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Quick action"

    • கலெக்டர் துரித நடவடிக்கை
    • புதிய வகுப்பறை கட்டி தர பொதுமக்கள் வலியுறுத்தல்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இதில் 190-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறனர்.

    இப்பள்ளியில் 2 வகுப்பறை கட்டிடம் மட்டும் நல்ல நிலையில் உள்ளது. மற்ற வகுப்பறைகள், கட்டிடம் சிதலமடைந்து மோசமான நிலையில் உள்ளது.

    பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டி தர பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    இந்நிலையில் தேசியநெடுஞ்சாலையில் கிரிசமுத்திரம் மேல்நிலைப்பள்ளிக்கு சென்றுக் கொண்டிருந்த 3 அரசு பள்ளி மாணவர்கள் வளையாம்பட்டு அருகே கார் மோதிய விபத்தில் பலியானார்கள்.

    சம்பவ இடத்திற்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வந்திருந்த போது அவரை சூழ்ந்துக் கொண்ட பொதுமக்கள் வளையாம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் படிப்பதற்கு போதிய இடவசதி இல்லை என தெரிவித்தனர்.

    இதனையடுத்து பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்ட கலெக்டர் மாணவர்கள் இருந்த பள்ளி கட்டிடம் மற்றும் வகுப்புறைகள் சூழ்நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக அங்கிருந்து பள்ளிக்கு வருகை புரிந்து இருந்த 173 மாணவர்களையும் தனியார் பள்ளி பஸ்கள் மூலம் வளையாம்பட்டு ஊராட்சியில் கிராம வறுமை ஒழிப்பு சங்க கட்டிடத்தில் அமர வைத்து தற்காலிகமாக பள்ளியை மாற்றம் செய்தார்.

    அங்கு வகுப்புகள் நடைபெற்றது. மேலும் வளையாம்பட்டு கிராமத்திலேயே நடுநிலைப்பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    • வாகன ஓட்டிகள் அவதி
    • பாதாள சாக்கடை திட்டப்பணிகள் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது

    வேலூர்:

    வேலுார் மாநகராட்சியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வேலுார்-ஆற்காடு சாலையை ஒட்டிய காகிதப்பட்டறை பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது.

    இதனால் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த அப்பகுதியில் தோண்டப்பட்ட பள்ளம் காரணமாக சாலை குண்டும் குழியுமாக மாறியது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.

    இதையடுத்து மாநகராட்சி நிர்வாகத்தினர் அந்த பகுதியில் சாலையை அமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் சைதாப்பேட்டை முருகன் கோவில் தொடங்கி- சத்துவாச்சாரி நெடுஞ்சாலையில் ஆற்காடு சாலை இணையும் பகுதி வரை முழுமையாக புதிய தார் சாலை அமைக்கும் பணி நேற்று தொடங்கியது.

    காகிதப்பட்டறையில் இருந்து தொடங்கிய இந்த - பணியில், முதல்கட்டமாக பாதாள சாக்கடை திட்ட பைப்லைன் அமைத்த பகுதிகளில் தார்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து அதிகாரி கள் கூறியதாவது;-

    இன்னும் ஓரிரு நாட்களில் இந்த பணி முடிக்கப்படும். பின்னர் ஆற்காடு சாலையில் முழுமையாக தார்சாலை அமைக்கும் பணி தொடங்கப்படும் என்றனர்.

    ×