என் மலர்
நீங்கள் தேடியது "pulling the rope"
- ஆனி தேரோட்டம் வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.
- இதனை முன்னிட்டு தேர்களை சுத்தப்படுத்தும் பணி தொடங்கியது.
ராஜபாளையம்
ராஜபாளையம்-மதுரை ரோட்டில் வரலாற்று சிறப்பு மிக்க பெத்தவநல்லூர் அஞ்சல்நாயகி உடனுறை மாயூரநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு சுவாமி எழுந்தருள ஒரு தேரும், அம்பாள் எழுந்தருள பெண் பக்தர்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் தேரும் உள்ளது.
ஆனி தேரோட்டம் வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்களை சுத்தப்படுத்தும் பணி தொடங்கியது. சமூக சேவகரும், ராஜபாளையம் தர்மாபுரம்தெரு, மாப்பிள்ளை விநாயகர் கோவில் நண்பர்கள் நற்பணிமன்ற தலைவருமான ராமராஜ் தலைமையில் தூசி படிந்த நிலையில் இருந்த தேர்களை ஆகம விதிகளின்படி பஞ்சகாவியம் கலந்த தூய நண்ணீர் மற்றும் ஏர்கன் முலம் சுத்தம் செய்து வருகின்றனர்.
மேலும் வார்னிஷ் அடித்து தேர் சக்கரங்களுக்கு வர்ணம் பூசி பழமை மாறாமல் அழகுபடுத்தும் பணியும் நடக்கிறது. தொடர்ந்து 27வருடங்களாக இந்த பணிகளை ராமராஜ் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






