search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "public stir"

    திருவள்ளூர் அருகே மின்தடையை கண்டித்து மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த வெங்கத்தூர் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அறிவிப்பில்லாத மின்தடை மற்றும் குறைந்த அழுத்த மின்சாரம் வருவதால் மின் சாதனங்கள் அடிக்கடி பழுதடைந்து வருகின்றன. இதனால் மாணவர்கள் படிக்க முடியாமலும், முதியவர்கள், குழந்தைகள் புழுக்கத்தாலும் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.

    இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனை கண்டித்து இன்று அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர்மணவாள நகர் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் மணவாள நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் மற்றும் மின் வாரிய அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டோர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். தடையின்றி மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    மேலும் உடனடியாக அப்பகுதிக்கு புதிய மின் மாற்றியை அமைப்பதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    அரக்கோணம் அருகே சாலையை சீரமைக்ககோரி பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் பனப்பாக்கம்-நெமிலி செல்லும் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் பனபாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட தென்மாம்பாக்கம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    தென் மாம்பாக்கம் திருமால்பூர் இடையேயான சாலை குண்டும், குழியுமாக உள்ளதாக கூறி அப்பகுதியை சேர்ந்தவர்கள் சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் பனப்பாக்கம்-நெமிலி செல்லும் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த நெமிலி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.இதையடுத்து பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.

    திண்டுக்கல்லில் பொதுமக்கள் ரெயிலை மறிக்க சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பழனி, கரூர், சென்னை ஆகிய 3 ரெயில் வழித்தடங்கள் இவ்வழியே செல்கிறது. தற்போது பாலம் வேலை நடைபெறுவதால் முதலாவது கேட் முழுவதுமாக மூடப்பட்டது.

    இதனால் செங்குறிச்சி, பாலகிருஷ்ணாபுரம் பகுதி மக்கள் 2 கி.மீ தூரம் சுற்றிச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த ரெயில் தண்டவாளத்தை பொதுமக்கள் கடக்க சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. ஆனால் பயன்பாட்டுக்கு கொண்டு வராததால் புதர்மண்டி காணப்படுகிறது.

    இந்த சுரங்கப்பாதையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் பல முறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சிலர் ஆபத்தான முறையில் ரெயில் தண்டவாளத்தை கடந்து வருகின்றனர்.

    நீண்ட நாட்களாக சுரங்கப்பாதையை பயன்பாட்டுக்கு கொண்டு வராததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் தண்டவாளத்தில் இறங்கி ரெயிலை மறிக்க முயன்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    சம்பவம் குறித்து அறிந்ததும் விரைந்து வந்த ரெயில்வே பாதுகாப்பு மற்றும் நகர் வடக்கு போலீசார் பொதுமக்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர். #tamilnews
    ×