search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "public disappointment"

    • முதல்-அமைச்சர் அறிவித்த ஏரியா சபை கூட்டம் குறித்த முறையான தகவல் இல்லை.
    • இதனால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

    விருதுநகர்

    நாளை (1-ந் தேதி) உள்ளாட்சி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி மாநிலம் முழுவதும் கிராமசபை கூட்டங்கள் நடத்துவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதில் முக்கிய பிரச்சினைகள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் 450 கிராம பஞ்சாயத்துக்களில் கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

    உள்ளாட்சி தினமான நாளை கிராமசபை கூட்டங்கள் போல் தமிழகத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சி கள், மாநகராட்சிகளில் வார்டு வாரியாக ஏரியாசபை கூட்டம் நடத்தப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இந்த கூட்டத்தில் கவுன்சி லர்கள் உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து அந்தந்த வார்டு மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து விதிமுறைக ளுக்கு உட்பட்டு அதனை நிவர்த்தி செய்ய நட வடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதே போல் ஊரக வளர்ச்சித்துறையின் முதன்மை செயலாளர் அமுதா, அரசின் செயல் திட்டங்கள், வெளிப்படை தன்மை குறித்த இயக்கங்கள் ஏற்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

    மேற்படி முதல்-அமைச்சர் அறிவித்த ஏரியாசபை கூட்டம் குறித்து இதுவரை மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஏரியாசபை கூட்டங்கள் வார்டு வாரியாக நடத்தப்படுமா? அல்லது குறிப்பிட்ட இடங்களில் மட்டும் நடைபெறுமா? என்று தெரியவில்லை. 24 மணி நேரம் கூட இல்லாத நிலையில் ஏரியாசபை கூட்டம் குறித்து அதிகாரிகள் எந்த அறிவிப்பும் வெளியிடாதது பொது மக்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.

    ஆடி மாதம் அம்மனுக்கு படையல் செய்வதால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று மீன்கள் விலை உயர்ந்து இருந்தது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். #FishPrice
    திருவொற்றியூர்:

    சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கடந்த வாரத்தை காட்டிலும் நேற்று மீன்கள் வரத்து அதிகளவில் இருந்தது. தற்போது ஆடி மாதம் என்பதால் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கூழ் ஊற்றி, இரவில் அம்மனுக்கு மட்டன், மீன் படையல் வைத்து வழிபடுவார்கள்.

    ஆடி மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று அம்மனுக்கு படையல் செய்வதற்காக ஏராளமான பொதுமக்கள் மற்றும் மீன்பிரியர்கள் மீன்கள் வாங்குவதற்காக காசிமேடு மீன்பிடிதுறைமுகத்தில் குவிந்தனர். இதனால் மீன்வரத்து அதிகம் இருந்தபோதிலும் மீன்களின் விலையும் உயர்ந்தே இருந்தது.



    குறிப்பாக 1 கிலோ வஞ்சிரம்-ரூ.1,000, ஷீலா-ரூ.650, வவ்வால்-ரூ.500, சங்கரா-ரூ.300-க்கும், இதுதவிர சின்னவகை மீன்கள் 1 கிலோ ரூ.250 முதல் ரூ.350 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.

    இதனால் மீன் வாங்க வந்த பொதுமக்கள் மற்றும் மீன்பிரியர்கள் விலையை கேட்டு ஏமாற்றத்துடன் மீன்களை வேடிக்கை பார்த்தபடி திரும்பிச் சென்றனர். பலர் விலை அதிகம் என்பதால் பெரிய வகை மீன்களை வாங்காமல் சிறய வகை மீன்களையே வாங்கிச் சென்றனர்.

    கடம்பா, எறா, கவளை மீன்கள் மற்றும் நண்டு உள்ளிட்டவைகள் விலை சற்று குறைவாக இருந்ததால் அதையே பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கிச்சென்றனர். இதனால் விலை அதிகம் உள்ள பெரிய வகை மீன்கள் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

    தற்போது காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விற்பனைக்காக தனி இடம் கட்டப்பட்டு பரந்து விரிந்து இருப்பதால், மீன்பிரியர்கள் எந்தவித தள்ளுமுள்ளும் இன்றி மீன்களை வாங்கிச்சென்றனர். 
    ×