search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Provisional score certificate"

    • மாணவர் சேர்க்கை முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • தலைமையாசிரியர்கள் கையொப்பமிட்டு, சான்றிதழ்கள் வழங்குகின்றனர்.

    திருப்பூர்:

    பிளஸ் 2 தேர்வு முடிவுகள், கடந்த 20ந் தேதி வெளியிடப்பட்டது. இதனால், தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமடைந்துள்ளது. தவிர, அரசு கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.பல கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தேவையாக உள்ளது. அவ்வகையில் உடுமலை கல்வி மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் துவங்கி உள்ளது.உடுமலையிலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் கையொப்பமிட்டு, சான்றிதழ்கள் வழங்குகின்றனர்.

    பள்ளித் தலைமையாசிரியர்கள் கூறுகையில், கல்லூரிகளில் தற்காலிக மதிப்பெண் பட்டியல் அடிப்படையில் மாணவர் சேர்க்கை முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் பள்ளிக்கு வந்து தற்காலிக சான்றிதழ் வாங்கிச்செல்கின்றனர் என்றனர்.

    ×