search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "prisoners escaped"

    இந்தோனேசியா நாட்டின் சிறையில் இருந்து தப்பிச் சென்றவர்களில் 36 கைதிகளை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் மேலும் 77 பேரை தேடி வருகின்றனர். #Indonesiajail #jailinmatesrun
    ஜகர்தா:

    இந்தோனேசியா நாட்டின் அசே மாகாணத்தில் உள்ள பன்டா அசே பகுதியில் உள்ள மத்திய சிறையில் இருந்து கடந்த மாதம் 29-ம் தேதி மாலை 113 கைதிகள் தப்பியோடி விட்டனர்.

    இங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ள 726 கைதிகள் கூட்டுத் தொழுகைக்காக திறந்து விடப்பட்டபோது, இந்த சந்தர்பத்தை சாதகமாக்கி, சிறையின் கம்பி வேலியை வெட்டி அவர்கள் தப்பிச் சென்றதாக ஊடகங்கள் தெரிவித்திருந்தன.


    தப்பியோடிய கைதிகள் பிடிப்பதற்காக நாடு முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், தப்பிச்சென்ற கைதிகளில்  இதுவரை 36 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் மேலும் 77 பேரை தேடி வருகின்றனர். அவர்களும் விரைவில் பிடிபடுவார்கள் என அசே மாகாண போலீஸ் செய்தி தொடர்பாளர் எரி அப்ரியோனோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  #Indonesiajail #jailinmatesrun
    மியான்மரில் நேற்று காலை சிறைக் கைதிகள் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. பின்னர் அது கலவரமாக மாறியதால் சிறையை உடைத்து 41 கைதிகள் தப்பினர். #myanmarjailbreak

    யங்கூன்:

    மியான்மரில் ஹபா-அன் என்ற இடத்தில் சிறைச் சாலை உள்ளது. அங்கு ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை அங்கு அடைக்கப்பட்டிருந்த சிறைக் கைதிகள் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. பின்னர் அது கலவரமாக மாறியது.

    இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. அதை பயன்படுத்தி கொண்ட கைதிகள் சிறை வளாகத்தை உடைத்துக் கொண்டு வெளியேறினர். அப்போது அவர்களை தடுத்த சிறை அதிகாரியை பயங்கரமாக தாக்கினர். அதில் அவர் காயம் அடைந்தார்.

    பின்னர் கிழக்கு கரோன் மாகாணத்தில் இருந்து சிறைக்கு வந்த லாரியை மடக்கி அதில் ஏறி 41 கைதிகள் தப்பினர். அதையடுத்து கைதிகளை தேடும் பணி நடந்தது.

    அவர்களில் 3 பேர் மட்டுமே பிடிபட்டுள்ளனர். எஞ்சிய கைதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பக்கத்து கிராமங்களில் புதிய நபர்களின் நடமாட்டம் காணப்பட்டதால் தகவல் தரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. #myanmarjailbreak

    ×