என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Prevention of work"
- ஊராட்சி ஒன்றியத்துக்கு சொந்தமான இடத்தை அதே பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆக்கிரமித்தனர்.
- அலுவலகத்திற்குள் நுழைந்து அங்கு பணி செய்து கொண்டிருந்த வட்டார வளர்ச்சி அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்தார்.
விழுப்புரம்:
மேல்மலையனூர் அருகே சிறுதலைப் பூண்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத்துக்கு சொந்தமான இடம் உள்ளது. அதே பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆக்கிரமித்தனர். இதனையடுத்து ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு தாசில்தார் அலெக்சாண்டர் உத்தரவிட்டிருந்தார். இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற அப்பகுதியிலுள்ள மக்கள் காலக்கெடு கேட்டனர். இந்நிலையில் சிறுதலைப் பூண்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் அருள்தாஸ் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தார்.
அப்போது அலுவலகத்திற்குள் நுழைந்து அங்கு பணி செய்து கொண்டிருந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சிலம்புச் செல்வனிடம் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் எனக் கூறி மிரட்டி, அவரை பணி செய்யவிடாமல் தடுத்தார். இதுகுறித்து புகாரின் பேரில் வளத்தி போலீசார் அருள்தாஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்