search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pre-monsoon"

    • கணக்கெடுக்கும் பணி வருகிற 17-ந் தேதி வரை தொடர்ந்து 6 நாட்கள் நடைபெற உள்ளது.
    • வனத்துறையினர் நேர்கோட்டுப் பாதையில் சென்று கண க்கெடுப்பு நடத்த உள்ளனர்.

    சத்தியமங்கலம்,

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சத்தியமங்கலம், பவானி சாகர், தாளவாடி, கடம்பூர், ஆசனூர், விளாமுண்டி உள்ளிட்ட 10 வனச்சர கங்களில் மழைக்காலத்திற்கு முந்தைய வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.

    இதையொட்டி வன ப்பகுதிகளில் புலிகள், சிறுத்தைகள் மற்றும் பெரிய தாவர உண்ணிகளான யானை, காட்டெருமை ஆகியவைகளின் கணக்கெடுக்கும் பணி இன்று (திங்கட்கிழமை) காலை தொடங்கி நடந்து வருகிறது.

    இன்று காலை தொடங்கிய வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி வருகிற 17-ந் தேதி வரை தொடர்ந்து 6 நாட்கள் நடைபெற உள்ளது.

    முதல் நாளான இன்று பகுதிவாரியாக வனத்துறை ஊழியர்கள் பிரிந்து சென்று கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர். 2-வது நாளாக நாளை (செவ்வாய்க்கிழமை) வனத்துறையினர் நேர்கோட்டுப் பாதையில் சென்று கண க்கெடுப்பு நடத்த உள்ளனர்.மேலும் 4 நாட்களும் பகுதிவாரியாகவும், நேர்கோட்டுப் பாதையிலும், சுழற்சி முறையில் இந்த கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.

    ஒரு குழுவிற்கு வன க்காவலர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் கொண்ட 4 பேர் கொண்ட குழுக்களாக பிரிந்து மொத்தம் சுமார் 300-க்கும் மேற்பட்டோர், உணவு, தண்ணீர், ஜி.பி.எஸ், ரேஞ்ச் பைண்டர், காம்பஸ் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களோடு அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று, இந்த புலிகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த 6 நாட்கள் புலிகள் கணக்கெடுப்பு முடிவடைந்த பின்னர் 4 நாட்களுக்கு பிறகு சத்தியமங்கலம் புலிகள்காப்பகத்துக்கு உட்பட்ட 10 வனச்சரகங்களிலும் தானியங்கி கேமிராக்கள் பொருத்தும் பணி நடைபெற உள்ளது.

    இதை தொடர்ந்து 3 மாதங்கள் அந்த தானியங்கி கேமிராக்கள் மூலம் சிறுத்தை மற்றும் புலிகளின் நடமாட்டம், பாலினம் மற்றும் குட்டிகளின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு, அந்த வீடியோ பதிவுகள் மற்றும் நேரடி கணக்கெடுப்பின் இறுதி எண்ணிக்கை உயர் அதி காரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    வனப்பகுதியில் 1.5 கிலோ மீட்டர் இடைவெளியில் ஒரு தானியங்கி கேமிரா என மொத்தம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மட்டும் 700 கேமிராக்களை பொருத்த வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

    சென்ற ஆண்டு வரை நடைபெற்ற கணக்கெடுப்பில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மட்டும் 80-க்கும் மேற்பட்ட புலிகள் உள்ளதாகவும், 100-க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் ஆரோக்கியமான வன ச்சூழலில் வாழ்ந்து வருவது. வனத்துறையினரின் புள்ளி விவரங்களின்படி தெரியவருகிறது.

    தற்பொழுது நடைபெறும் புலிகள் கணக்கெடுப்பின் இறுதி வடிவம் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பிறகே, மேலும் புலிகள் மற்றும் சிறுத்தைகளின் எண்ணிக்கை எந்த அளவிற்கு உயர்ந்துள்ளது என்பது குறித்து தெரிய வரும் என சத்தியமங்கலம் புலிகள் காப்பக உயிரியலாளர் சக்திவேல் தெரித்துள்ளார்.

    • களப்பணியாளர்களுக்கு வன உயிரியலாளர் சக்தி வேல், வனவர் தீபக்குமார் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
    • பாதுகாப்பினை கருத்தில் கொண்டு துப்பா க்கியினை கட்டாயம்எடுத்து செல்ல வேண்டும்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மழைக்கு முந்தைய வன விலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் வருகிற 12-ந் தேதி முதல் தொடங்குகிறது. மேலும் தானியங்கி கேமிராக்களை கொண்டு புலிகள் கணக்கெடுப்பு பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது.

    அதன்படி 12-ந் தேதி பெரிய தாவர உண்ணிகள் மற்றும் மாமிச உண்ணிகளின் தடயங்கள் கணக்கீடு செய்யப்படுகிறது. 13-ந் தேதி நேர்கோட்டு பாதையில் கணக்கெடுப்பு பணி (காலை மற்றும் மாலை) நடக்கிறது.

    14-ந் தேதி பெரிய தாவர உண்ணிகள் மற்றும் மாமிச உண்ணிகளின் தடயங்கள் கணக்கீடு செய்யப்படுகிறது. 15-ந் தேதி நேர்கோட்டு பாதை கணக்கெடுப்பு பணியும்,

    16-ந் தேதி பெரிய தாவர உண்ணிகள் மற்றும் மாமிச உண்ணிகளின் தடயங்களும், 17-ந் தேதி நேர்கோட்டு பாதை கணக்கெடுப்பு பணியும் நடக்கிறது.

    தொடர்ந்து 22-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை தானியங்கி கேமிரா பொருத்தும் பணிகள் நடக்கிறது. 27-ந் தேதி முதல் தானியங்கி கேமிரா கண்காணிக்கும் பணி நடக்கிறது.

    28-ந் தேதி முதல் அடுத்த மாதம் 1-ந் தேதி வரை தானியங்கி கேமிரா அகற்றும் பணிகளும், 2-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை புகைப்பட கருவிகளை கொண்டு செல்லுதலும் நடக்கிறது. தொடர்ந்து போட்டோ தரவுகளை சேகரிக்கும் பணிகள் நடக்கிறது.

    இந்த நிலையில் வனவி லங்குகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் களப்பணியாளர்களுக்கு வன உயிரியலாளர் சக்தி வேல், வனவர் தீபக்குமார் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

    அப்போது அவர்களுக்கு பல்ேவறு ஆலோசனைகளை வழங்கினர். வன உயிரின கணக்கெ டுப்பு பணியின் போது களப்பணியாளர்கள் தங்கள் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு துப்பா க்கியினை கட்டாயம்எடுத்து செல்ல வேண்டும். களப்பணியாளர்கள் அவரவர்களுக்கு உரிய சீருடையில் களப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

    வன உயிரினக் கணக்கெடுப்பு பணியின் போது ஓய்வு எடுக்கும் இடம், உணவு அருந்த அமரும் இடம் பாதுகா ப்பானதாக இருக்கின்றதா? என்பதனை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.

    அதாவது நான்கு திசைக ளில் வன உயிரினங்கள் வந்தால் எளி தில் அறிய கூடிய வகையில் நான்கு திசைகளிலும் பார்க்ககூடிய வண்ணம் பாதுகாப்பினை உறுதி படுத்தி களப்ப ணியாளர்கள் அமரவே ண்டும்.

    வன உயிரின கணக்கெடு ப்பு பணியின் போது செல்போன்களை பயன்படு த்திக் கொண்டு நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும்.

    ஏனெனில் வன விலங்குகள் அருகில் இருந்தால் அதனை நம்மால் உணர இயலாமல், பாதுகா ப்பற்ற சூழ்நிலைகள் உருவாக்ககூடும் என்பது உள்பட ஏராளமான ஆலோசனைகளை வழங்கினர்.

    ×