search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pothigai literary forum"

    • நெல்லை ஸ்ரீசாரதா மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறை பொதிகை இலக்கிய மன்றத்தின் சார்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சிறப்பு விருந்தினராக, நெல்லை அகில இந்திய வானொலியின் பண்பலை பகுதி நேர அறிவிப்பாளர் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவாற்றினார்.

    நெல்லை:

    நெல்லை ஸ்ரீசாரதா மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறை பொதிகை இலக்கிய மன்றத்தின் சார்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

    பொதிகை இலக்கிய மன்றத்தின் துணைத்தலைவரும், தமிழ்த்துறை உதவிப் பேராசிரியருமான கார்த்திகா வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் கமலா தலைமையுரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக, நெல்லை அகில இந்திய வானொலியின் பண்பலை பகுதி நேர அறிவிப்பாளர் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவாற்றினார். அவர் தம் சிறப்புரையில், பெண்கள் தன்னம்பிக்கை கொண்டு சாதித்த வரலாறுகளை எடுத்துக் கூறி மாணவியரை சாதிக்கத் தூண்டினார். மேலும் அவர் மாணவியர் தம் அறிவை கூர்மையாக்கி தெளிவான சிந்தனை கொண்டு சீரிய செயலாற்றிட வேண்டுமென அறிவுறுத்தினார்.

    தமிழ்த்துறைத்தலைவர் தனலெட்சுமி, தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் சிந்து ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பொதிகை இலக்கிய மன்றத்தின் செயலர், இளநிலை 2-ம் ஆண்டு கணிதவியல் துறை மாணவி தனலெட்சுமி நன்றி கூறினார்.

    ×