search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "postal"

    • மேற்கு மண்டல தபால் துறை சார்பில் பொதுமக்களுக்கு தடையற்ற அஞ்சல் சேவைகளை வழங்கும் பொருட்டு ஆப்ரேஷன் 8.0 என்று அழைக்கப்படும் புதிய திட்டம் திருச்செங்கோடு தலைமை தபால் நிலையத்தில் தொடங்கப்பட்டது.
    • இந்த திட்டத்தின் படி திருச்செங்கோடு தலைமை தபால் நிலையம் கடந்த 2-ந் தேதி முதல் செயல் பட்டு வருகிறது.

    மேற்கு மண்டல தபால் துறை சார்பில் பொதுமக்களுக்கு தடையற்ற அஞ்சல் சேவைகளை வழங்கும் பொருட்டு ஆப்ரேஷன் 8.0 என்று அழைக்கப்படும் புதிய திட்டம் திருச்செங்கோடு தலைமை தபால் நிலையத்தில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் படி திருச்செங்கோடு தலைமை தபால் நிலையம் கடந்த 2-ந் தேதி முதல் செயல் பட்டு வருகிறது. வேலைக்கு செல்லும் பொதுமக்கள் தங்கள் வேலை நாட்களில் பணிக்கு செல்லும்போது அல்லது பணியிலிருந்து திரும்பும் பொழுது தங்களுக்கு தேவையான அஞ்சல் சேவைகளை தடையின்றி பெறலாம். சேமிப்பு கணக்குகளில் பணம் செலுத்துதல் பதிவு தபால்களை அனுப்புதல், மணி ஆடர்களை அனுப்புதல் , அஞ்சலக ஆயுள் காப்பீட்டு பிரிமியங்களை செலுத்துதல் போன்ற சேவைகளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பெற்றுக் கொள்ளலாம். பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு அஞ்சல் சேவைகளை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். நாமக்கல் தலைமை அஞ்சலகத்தை தொடர்ந்து திருச்செங்கோடு தலைமை அஞ்சலகத்திலும் இந்த சேவை விரிவுபடுத்தபட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி திருச்செங்கோடு தலைமை அஞ்சல் அதிகாரி உதயகுமார் மற்றும் துணை அஞ்சலக அதிகாரி தீபா முன்னிலையில் தொடங்கியது. நிகழ்ச்சியில் திருச்செங்கோடு அஞ்சல் உட்கோட்ட அதிகாரி ரமேஷ் மற்றும் சங்ககிரி அஞ்சல் உட்கோட்ட அதிகாரி நவீன் குமார் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தனர்.

    • முருகன் புகைப்படம், திருநீறு வீட்டுக்கே அனுப்பி வைக்கப்படும் என தபால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • பழனி கோவிலில் தைப்பூச திருவிழா வருகிற பிப்ரவரி 5ந் தேதி நடக்கிறது.

    உடுமலை:

    பழனி கோவிலில் தைப்பூச திருவிழா வருகிற பிப்ரவரி 5ந் தேதி நடக்கிறது.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அதிகளவு வருவது வழக்கம். இந்து சமய அறநிலையத்துறை தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் வீட்டிலிருந்த படியே பிரசாதங்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து இருந்தது.

    அதன்படி மாவட்டங்களில் உள்ள தபால் நிலையங்களில் பழநி பஞ்சாமிர்தம் பெறுவதற்கான விண்ணப்பங்களில் முகவரியை பூர்த்தி செய்து 250 ரூபாய் செலுத்த வேண்டும். விரைவு அஞ்சல் சேவை வாயிலாக அரை கிலோ பஞ்சாமிர்தம், முருகன் புகைப்படம், திருநீறு வீட்டுக்கே அனுப்பி வைக்கப்படும் என தபால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×