search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "population growth"

    • கள்ளக்குறிச்சியில் உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு ரதம் கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கிஅவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
    • இவ்வாண்டின் கருப்பொ ருள் “குடும்ப கட்டுப்பாடு முறைகளை ஏற்போம், நம் முன்னே ற்றத்தில் புதிய அத்தியாயம் படைப்போ ம் என்பதாகும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மருத்துவம்மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் மக்கள் தொகை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு ரதம் மற்றும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.அப்போது அவர் கூறியதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11-ம் நாள் உலக மக்கள் தொகை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டின் கருப்பொ ருள் "குடும்ப கட்டுப்பாடு முறைகளை ஏற்போம், நம் முன்னே ற்றத்தில் புதிய அத்தியாயம் படைப்போ ம் என்பதாகும் " இதில் விழிப்புணர்வு ரதம் மற்றும் தனியார் கல்லூரி மாண வர்களை கொண்டு மக்கள் தொகை கட்டு ப்பாட்டின் அவசியத்தை உணர்த்தும் விதமாக விழி ப்புணர்வு பதாகைகளை ஏந்தி செல்லும் விழிப்பு ணர்வு பேரணி ஆகியவைகள் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த பேரணி நகரத்தின் முக்கிய வீதிகளில் சென்று 4 முனை சந்திப்பில் நிறைவுற்றது. மேலும், மக்கள் தொகை பெருக்கத்தை கட்டு ப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு ரதம் மற்றும் சிறப்பு நிகழ்வுகள் ஜூலை 12 முதல் ஜீலை 24 வரை தொடர்ந்து நடைபெறுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் கள்ளக்குறிச்சி மருத்துவமனை முதல்வர் உஷா, இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் சுகாதாரப்பணிகள்) பாலச்சந்தர், துணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் குடும்ப நலம்) மணிமேகலை, துணை இயக்குநர் பொது சுகாதாரப் பணிகள் ராஜா, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவ க்கண்காணிப்பாளர்நேரு, துணை மருத்துவக் கண்காணிப்பாளர் பழமலை மற்றும் அரசு அலுவலர்கள், தனியார் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    கல்வி, சுகாதாரம் கிடைக்க மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்கவேண்டும் என்று கலெக்டர் ராமன் பேசினார்.
    வேலூர்:

    உலக மக்கள்தொகை தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. வேலூரில் குடும்பநலத்துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கருத்தரங்கு நடந்தது. பழைய பஸ்நிலையம் அருகே நடந்த கருத்தரங்குக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கி, போட்டிகளில் வெற்றிபெற்ற கல்லூரி மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    1951-ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகை 36 கோடி. இன்று 130 கோடியாக உள்ளது. இதனால் சராசரி வயது 28 ஆக உள்ளது. இதன்காரணமாக இளைஞர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். மக்கள் தொகை பெருக்கத்தை தடுக்க முடியாது. ஆனால் கட்டுப்படுத்தலாம்.

    தமிழ்நாட்டில் 8 கோடி மக்கள் உள்ளனர். ஆண்டுக்கு 11 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதில் பெண்களின் பங்கு பிரதானமாக இருக்கிறது. ஆண்களின் பங்கு குறைவாகவே இருக்கிறது. ஒரு குடும்பத்தில் 2 குழந்தைகளுக்கு மேல் 3-வது, 4-வது குழந்தை பிறப்பதை குறைக்கவேண்டும். அதற்கு பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    மக்கள்தொகை பெருகினால் தண்ணீர், காற்று குறைந்து சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். 2022-ம் ஆண்டில் குடிக்கக்கூட தண்ணீர் இல்லாமல் போகும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. 2050-ம் ஆண்டுக்கு பிறகு உணவுகூட கிடைக்காத நிலை ஏற்படும். எனவே நமக்கு தேவையான கல்வி, சுகாதாரம் தேவையான அளவு கிடைக்க மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக காந்திசிலையில் இருந்து புறப்பட்ட விழிப்புணர்வு ஊர்வலத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

    கருத்தரங்கில் குடும்பநலத்துறை துணை இயக்குனர் சாந்தி வரவேற்றார். அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்திமலர், சுகாதார பணிகள் துணை இயக்குனர் சுரேஷ் ஆகியோர் பேசினர். முடிவில் மாவட்ட மக்கள் கல்வி தகவல் அலுவலர் லோகநாதன் நன்றி கூறினார். 
    ×