search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Poonam Kaur"

    • நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற அரிய வகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
    • சமந்தாவை தொடர்ந்து நடிகை பூனம் கவுரும் பைப்ரோமியால்ஜியா என்ற அரிய வகை நோயால் பாதித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற அரிய வகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் சமீபத்தில் அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தினார். ஸ்டூடியோவிலும் குளுக்கோஸ் ஏற்றியபடி டப்பிங் பேசிய புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் விரைவில் குணம் அடைய ரசிகர்களும், திரையுலகினரும் வாழ்த்தி உள்ளனர்.

     

    பூனம் கவுர்

    பூனம் கவுர்

    இந்த நிலையில் நடிகை பூனம் கவுரும் பைப்ரோமியால்ஜியா என்ற அரிய வகை நோயால் பாதித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பூனம் கவுர் தமிழில் 2007-ல் வெளியான நெஞ்சிருக்கும் வரை படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து உன்னைப்போல் ஒருவன், பயணம், வெடி, ஆறு மெழுகுவர்த்திகள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

    பூனம் கவுர்

    பூனம் கவுர்


    பூனம் கவுரை தாக்கியுள்ள நோயால் சோர்வு, தூக்கம், மன நிலை பிரச்சினைகள் ஏற்படும் என்றும், வாழ்நாள் முழுவதும் இந்த நோய் பாதிப்பு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. தற்போது பூனம் கவுர் உடல் வலியால் அவதிப்படுவதாக நெருக்கமானவர்கள் தெரிவித்து உள்ளனர். அவர் விரைவில் குணம் அடைய ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

    தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் ஸ்ரீரெட்டியை தொடர்ந்து, தயாரிப்பாளர் ஒருவர் மீது புகார் கூறியிருக்கிறார் பூனம் கவுர். #PoonamKaur #SriReddy
    தமிழில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய நெஞ்சிருக்கும்வரை படத்தில் நாயகியாக நடித்திருந்த பூனம் கவுர், ‘பயணம்’, ‘என் வழி தனி வழி’, 6 மெழுகுவர்த்திகள், வெடி  உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர், தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு சிரீயலில் நடித்து வருகிறார்.

    இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், படவாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக கூறி வரும் நடிகை ஸ்ரீரெட்டியின் புகார் குறித்தும் பேசினார். அப்போது சினிமாவில் இது போன்ற தொல்லைகள் நடிகைகளுக்கு இருப்பதாக ஒப்புக்கொண்டார். மேலும் தயாரிப்பாளர் ஒருவர் மீது பரபரப்பு புகார் ஒன்றையும் கூறியுள்ளார்.

    தயாரிப்பாளரின் பெயரைக் குறிப்பிடாமல் பேசிய பூனம் கவுர், முன்னணி தெலுங்கு பட தயாரிப்பாளர் ஒருவர் தன்னுடைய படங்களை பார்த்து புகழ்ந்தார் என்றும், தன்னை அலுவலகத்தில் வந்து சந்திக்க கூறியதாகவும் தெரிவித்தார்.



    மேலும் பேசிய பூனம் கவுர், அந்த தயாரிப்பாளர் தனக்கு முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாகவும் கூறினார். இதையடுத்து எனது அம்மாவுடன் அவரது அலுவலகம் சென்றேன். அப்போது அவரின் முகம் மாறியது. என் அம்மாவுடன் அலுவலகம் வந்ததை அவர் விரும்பவில்லை. இதனால் அந்த தயாரிப்பாளர் என்னிடம் சரியாக கூட முகம் கொடுத்து பேசவில்லை. இதுவரை அந்த தயாரிப்பாளர் கூறியபடி எனக்கு எந்த வாய்ப்பும் தரவில்லை. சினிமாவில் நடிகைகள் பல்வேறு அவமானங்களை சந்திக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
    நெஞ்சிருக்கும்வரை, வெடி பட நாயகி பூனம் கவுர் போனில் வந்த மிரட்டலால் டுவிட்டரில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. #PoonamKaur
    சமூக வலைதளங்களால் நன்மை எவ்வளவோ அதே அளவு தீமையும் இருக்கிறது என்பதை உணர்த்தி உள்ளார் நடிகை பூனம் கவுர். நெஞ்சிருக்கும்வரை, வெடி, நாயகி உள்பட சில படங்களில் நாயகியாக நடித்தவர் பூனம் கவுர்.

    தமிழில் குறைந்த படங்கள் நடித்திருந்தாலும் தெலுங்கில் பிரபலமான நடிகை. சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் இவர் திடீர் என்று “டுவிட்டரில் நான் உங்களை விட்டுச் செல்கிறேன். எப்போது திரும்பி வருவேன் எனத் தெரியாது’ என்று பதிவிட்டு வெளியேறியுள்ளார்.

    சில தினங்களுக்கு முன் ஆபாச இணையதளம் ஒன்றில் பூனம் பற்றி தவறாக பதிவிட்டிருந்தனர். இதன் பின்னணியில் இயக்குனர் ஒருவர் இருப்பதாகக்கூறி அவரை திட்டி பதிவிட்டிருந்தார் பூனம். அந்த இயக்குனர் யார் என்பதைக் குறிப்பிடவில்லை. அதன் பின் பூனம் கவுர் சமூக வலைதளங்களிலும், போனிலும் மிரட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

    அதனால் தான் டுவிட்டரில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. இவரைப் போலவே தெலுங்கு முன்னணி கதாநாயகன் பவன் கல்யானின் முன்னாள் மனைவி ரேணு தேசாய் டுவிட்டரில் இருந்து சமீபத்தில் விலகினார். அவரும் மற்றொரு காரணத்துக்காக மிரட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #PoonamKaur
    திரையுலகினரைப் பற்றி புகார் கொடுத்த ஸ்ரீரெட்டியை தொடர்ந்து, நெஞ்சிருக்கும் வரை, பயணம் படங்களில் நடித்த பூனம் கவுர் புகார் தெரிவித்திருக்கிறார். #PoonamKaur
    தெலுங்கு திரை உலகில் பட வாய்ப்புக்கு நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார் கூறி இந்திய திரை உலகையே அதிரவைத்தார். தனது ஸ்ரீலீக்ஸ் முகநூலில் பாலியல் தொல்லை கொடுத்த இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் பெயர்களையும் வெளியிட்டார். இந்த நிலையில் பிரபல நடிகை பூனம் கவுரும் இயக்குனர் ஒருவர் மீது புகார் தெரிவித்துள்ளார்.

    இவர் தமிழில் ‘நெஞ்சிருக்கும் வரை’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து பயணம், 6, வெடி, என் வழி தனி வழி, நாயகி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். பூனம் கவுருக்கும் தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுக்கும் தொடர்பு இருப்பதாக கிசுகிசுக்கள் பரவி உள்ளன.

    தற்போது தோல்வி பட நடிகைகளுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கும் ஒரு இயக்குனர் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் சதியில் ஈடுபட்டு இருப்பதாக பூனம் கவுர் குற்றம் சாட்டி உள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:-

    “அந்த டைரக்டருக்கு அதிக படங்கள் இல்லை. ஆனாலும் மற்றவர்கள் வாழ்க்கையில் விளையாடிக்கொண்டு இருக்கிறார். எனது தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட்டும் திரித்தும் பேசுகிறார். நான் அதுகுறித்து நேரில் கேட்டபோது ஒன்றும் தெரியாதவர்போல் பதில் சொன்னார். அவருக்கு வேண்டிய பெண்கள் மட்டுமே சினிமாவில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.



    இவரை பற்றி வெளியே சொல்ல முடியாத பல விஷயங்கள் இருக்கிறது. அவருக்கு வேண்டிய பெண்கள் தொடர்ந்து தோல்வி படம் கொடுத்த பிறகும் அவர்களுக்கு நடிக்க வாய்ப்பு அளிப்பது ஏன் என்று புரியவில்லை. மற்றவர்கள் கலை உணர்வுகளை கொலை செய்கிறார். அவர் செய்யும் வினையே அவரை தண்டிக்கும்.”

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இயக்குனரின் பெயரை பூனம் கவுர் வெளியிடவில்லை. இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    ×