search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pooja at Mayavar"

    • கருமாண்டாம்பா ளையத்தில் உள்ள மாயவர் கோவிலில் ஆடிப்பூர த்தையொட்டி சிறப்பு யாக பூஜை நடைபெற்றது.
    • மாயவர் சீதேவி, பூதேவி, ஆண்டாள் நாச்சியார்க்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

    கொடுமுடி:

    கொடுமுடி அருகே கருமாண்டாம்பா ளையத்தில் உள்ள மாயவர் கோவிலில் ஆடிப்பூர த்தையொட்டி சிறப்பு யாக பூஜை நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து மாயவர் மற்றும் சீதேவி, பூதேவி அம்மனுக்கும், ஆண்டாள் நாச்சியாருக்கும் பால், தயிர், நெய், தேன், விபூதி போன்ற 16 வகையான வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிசேகம் நடைபெற்றது.

    பின்னர் மாயவர் சீதேவி, பூதேவி, ஆண்டாள் நாச்சியார்க்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாயவர், ஆண்டாள் நாச்சியாரை கோவிந்தா, கோவிந்தா என்று கரகோ ஷமிட்டு வணங்கினர்.

    தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

    ×