search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pongal Products"

    • பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் பொங்கல் பொருட்கள் விற்பனை சூடு பிடித்துள்ளது.
    • மண்பானைகளில் அழகுக்கேற்ப ரூ.500 வரையிலும், பஞ்சவர்ண பானைகள் ரூ.800 வரையிலும், 3 அடுப்புகட்டிகள் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    நெல்லை:

    தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் பொங்கல் பொருட்கள் விற்பனை சூடு பிடித்துள்ளது.

    பொங்கல் பானைகள்

    பொங்கலையொட்டி பாளை, டவுன் மார்க்கெட்டுகளில் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் பொங்கல் வைப்பதற்காக மண் அடுப்புகள், மண் பானைகள் பல்வேறு இடங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச்சாலை, திருச்செந்தூர் சாலை, சட்டக்கல்லூரி பகுதியில் புதுவரவாக பஞ்சவர்ண பானைகள் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த பானைகளை கடந்த 10 நாட்களாக பொதுமக்கள் ஆர்டர் கொடுத்து வாங்கி செல்கிறார்கள்.

    மண்பானைகளில் அழகுக்கேற்ப ரூ.500 வரையிலும், பஞ்சவர்ண பானைகள் ரூ.800 வரையிலும், 3 அடுப்புகட்டிகள் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    காய்கறிகள் குவிந்தன

    பொங்கலையொட்டி நெல்லை, தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் கிழங்கு வகைகள் உள்பட அனைத்து வகையான காய்கறிகளும், மூடை மூடைகளாக வாகனங்களில் டவுன் மார்க்கெட், பாளை மார்க்கெட்டுகளுக்கு வந்து குவிந்துள்ளது. அவற்றை சிறுவியாபாரிகள் வாங்கி கடைகளுக்கு வாங்கி சென்றனர்.

    இதேபோல பொங்கல்படி கொடுப்பதற்காகவும், காய்கறிகள் வாங்க மார்க்கெட்டுகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. வரத்து அதிகமாக இருந்த போதிலும், கூட்டம் அலைமோதியதால் காய்கறிகள் விலை நேற்றைவிட சற்று அதிகரித்து காணப்பட்டது.

    கரும்பு கட்டுகள்

    ெபாங்கலையொட்டி தேனி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட பல்ேவறு இடங்களில் இருந்து நெல்லை சந்திப்பு, டவுன், பாளை, தச்சநல்லூர், மேலப்பாளையம் பகுதிகளுக்கு கரும்புகள் கட்டு கட்டுகளாக லாரிகளில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு குவித்து வைக்கப்பட்டுள்ளது.

    10 எண்ணிக்கைகள் கொண்ட கரும்புகள் ரூ.400க்கு விற்கப்படுகிறது. ஒரு கரும்பின் விலை ரூ.40 க்கு விற்கப்படுகிறது.

    மஞ்சள் குலைகள்

    பாளையங்கோட்டை, அம்பை, சேரன்மகாதேவி பகுதியில் இருந்து விற்பனைக்காக மஞ்சள் குலைகள் மார்க்கெட்டு களுக்கு வந்துள்ளது. ஒரு ஜோடி மஞ்சள் குலைகள் ரூ.40 வரை விற்கப்படுகிறது.

    இதேபோல் பாளை ராஜகோபாலசுவாமி கோவில் மற்று டவுன் உள்பட மாநகரின் பல்ேவறு இடங்களில் பனை ஓலைகள் விற்பனையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    பனங்கிழங்கு

    இதற்காக சீவலப்பேரி மற்றும் பனை ஓலைகள் கொண்டு வரப்பட்டது. ஒரு பனை ஓலை ரூ.40 வரை விற்க்கப்படுகிறது. இதேபோல் 25 கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு பனங்கிழங்குகள் ரூ.60-க்கும், 50 கிழங்குகள் கொண்ட கட்டுகள் ரூ.110-க்கும் விற்கப்படுகிறது.

    அம்பை, கல்லிடைக்கு றிச்சி, சேரன்மகா தேவி, ராதாபுரம், நாங்குநேரி, திசையன்விளை, பணகுடி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பொங்கல் பொருட்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.

    சீர்வரிசை பொருட்கள்

    புதுமன தம்பதிகளுக்கு பொங்கல்படி கொடுப்ப தற்காக சீர்வரிசை பொருட்கள், நகைகள், ஜவுளிகள் உள்ளிட்டவை வாங்குவதற்காக இன்று கடைகளிலும் பொதுமக்கள் திரண்ட வண்ணம் இருந்தனர்.

    இதனால் நெல்லை மாநகர பகுதியில் உள்ள கடைகளில் திருவிழா போல் கூட்டம் இருந்தது.

    ×