என் மலர்
நீங்கள் தேடியது "Policeman dies"
- வேலையை முடித்து விட்டு திரும்பிய போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்தகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கோபி (வயது 28). இவர் ராணிப் பேட்டை மாவட்ட ஆயுதப் ப டை போலீஸ்காரரான இவர், ஆயு தப்படை கேண்டீனில் கேஷி யராக வேலை செய்து வந்தார்.
நேற்று இரவு வேலையை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் ராணிப்பேட்டையில் இருந்து ஆற்காடு வந்துள் ளார். பின்னர் அங்கிருந்து கண்ணமங்கலம் நோக்கி சென்
றுள்ளார். நாராயணபுரம் அருகே சென்றபோது எதிரே வந்த நெல் அறுவடை எந்தி ரத்திரம் கோபியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில் படுகாயம்
அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் திமிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 37). இவர் பிரம்மதேசம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார்.
நேற்று இரவு பணி முடிந்து பாலசுப்பிரமணியன் ஒரு மோட்டார் சைக்கிளில் திண்டிவனம் நோக்கி புறப்பட்டார். ஆத்தூர் கூட்டுசாலையில் வந்தபோது அந்த வழியாக வந்த வாகனம் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பாலசுப்பிரமணியன் பலத்த காயம் அடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிசிக்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பாலசுப்பிரமணியன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பிரம்மதேசம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த பாலசுப்பிரமணியனின் உடலுக்கு விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் போலீசார் அஞ்சலி செலுத்தினர்.






