search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Brahmadesam accident"

    பிரம்மதேசம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் போலீஸ்காரர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மரக்காணம்:

    திண்டிவனத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 37). இவர் பிரம்மதேசம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார்.

    நேற்று இரவு பணி முடிந்து பாலசுப்பிரமணியன் ஒரு மோட்டார் சைக்கிளில் திண்டிவனம் நோக்கி புறப்பட்டார். ஆத்தூர் கூட்டுசாலையில் வந்தபோது அந்த வழியாக வந்த வாகனம் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பாலசுப்பிரமணியன் பலத்த காயம் அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிசிக்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பாலசுப்பிரமணியன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பிரம்மதேசம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இறந்த பாலசுப்பிரமணியனின் உடலுக்கு விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் போலீசார் அஞ்சலி செலுத்தினர்.
    ×