search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Police Written Test"

    • புதுவையில் இன்று 9 மையங்களில் நடைபெற்றது.
    • நவீன தொழில்நுட்ப சாதனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு நடத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை காவல் துறையில் காலியாக உள்ள 253 போலீஸ், 26 டிரைவர் பணியிடங்களை நிரப்ப கடந்த மார்ச் மாதம் உடல் தகுதி தேர்வு நடந்தது.

    இதில் போலீஸ் பணியிடத்துக்கு ஆண்கள் 2 ஆயிரத்து 91, பெண்கள் ஆயிரத்து 16 என மொத்தம் 3 ஆயிரத்து 107 பேர் தகுதி பெற்றனர்.

    டிரைவர் பணிக்கு 73 பேர் தேர்வு பெற்றனர். போலீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எழுத்து தேர்வு நடந்தது.

    புதுவையில் லாஸ்பேட்டை வள்ளலார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாக்குமுடையான்பட்டு இதயா பெண்கள் கல்லூரி, சங்கரவித்யாலயா பள்ளி, விவேகானந்தா பள்ளி, முத்தியால்பேட்டை பாரதிதாசன் கல்லூரி, கருவடிகுப்பம் பாத்திமா மேல்நிலைப்பள்ளி உட்பட மொத்தம் 9 மையங்களில் எழுத்து தேர்வு நடந்தது.

    முதல்தாள் தேர்வு காலை 10 மணி முதல் 12 மணி வரை நடந்தது. தேர்வர்களின் வருகை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்பட்டது. காலை 8 மணிக்கே தேர்வர்கள் வந்திருந்தனர்.

    முழுமையான சோதனைக்கு பின்னரே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    செல்போன், ஸ்மார்ட் வாட்ச் உட்பட நவீன தொழில்நுட்ப சாதனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு நடத்தப்பட்டது.

    தேர்வர்கள் ஆர்வத்துடன் தேர்வுகளை எழுதினர். அரசு செயலர் குமார் தலைமையில் பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறையினர் தேர்வுகளை நடத்தினர். இன்று மதியம் 2 மணி முதல் 4 மணி வரை 2-ம் தாள் தேர்வு நடக்கிறது.

    தேர்வு முடிவுகள் ஓரிருநாளில் அறிவிக்கப்பட உள்ளன.

    • மதுரையில் நாளை போலீஸ் எழுத்து தேர்வை 11 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.
    • மதுரை மாவட்டத்தின் 12 தேர்வு மையங்களிலும், 1200 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    மதுரை

    தமிழகத்தில் 2022 பணியிடங்களுக்கான 2-ம் நிலை காவலர் உடல் தகுதி தேர்வு சில வாரங்களுக்கு முன்பு நடந்தது. நாளை (26-ந் தேதி) எழுத்து தேர்வு நடக்கிறது. இதற்காக மதுரை மாவட்டத்தில் 12 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

    இங்கு 11 ஆயிரத்து 500 பேர் எழுத்து தேர்வை எழுதுகின்றனர். இதில் 6,926 பேர் ஆண்கள், 4,572 பேர் பெண்கள், 2 பேர் மாற்றுத் திறனாளிகள் ஆவர்.

    இதுகுறித்து மாநகர போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 2-ம் நிலை எழுத்து தேர்வுக்கு நுழைவுசீட்டு பெற்றவர்கள் குறித்த நேரத்துக்கு முன்பாக தேர்வு மையத்தில் ஆஜராக வேண்டும். கருப்பு அல்லது நீலநிற பந்துமுனை பேனா, நுழைவுசீட்டு, எழுத்து அட்டை தவிர வேறு எந்த பொருட்களும் தேர்வு மையத்திற்க்குள் அனுமதிக்கப்பட மாட்டாது. அந்த பொருட்களை தேர்வு மையத்திற்கு வெளியில் ஒப்படைத்து விட்டு, பரீட்சை முடிந்த பிறகு திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.

    மதுரை மாவட்டத்தில் நாளை நடைபெறும் காவலர் எழுத்து தேர்வுக்கான ஏற்பாடுகளை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில் குமார் தலைமையில் துணை கமிஷனர் வனிதா மற்றும் போலீஸ் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    ×