search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police man dies"

    கரூர் அருகே இன்று அதிகாலை மாட்டு வண்டி மீது பைக் மோதிய விபத்தில் போலீஸ்காரர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கரூர்:

    கரூர் தொழிற்பேட்டை அண்ணாநகர் சிலோன் காலனியை சேர்ந்தவர் மதன்ராஜ் (வயது 27). இவர் தமிழக காவல்துறையில் அதிரடிப்படை போலீஸ்காரராக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பணியாற்றி வந்தார்.

    இந்தநிலையில் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த அவர், இன்று அதிகாலை கரூர் நெரூரில் உள்ள நண்பரை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றார். ஒத்தக்கடை அருகே செல்லும் போது எதிரே மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டி மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட மதன்ராஜ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே அவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு கரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது மதன்ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் கரூர் வாங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதன்ராஜ் தமிழ்நாடு இளைஞர்காவல் படை மூலம் வாங்கல் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார். பின்னர் தமிழக காவல்துறையில் போலீஸ்காரராக பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×