search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Police injured in"

    • விபத்தில் போலீஸ் ஏட்டு தனக்கொடிக்கு இடதுபுற தோலில் காயம் ஏற்பட்டது.
    • இந்த விபத்து குறித்து கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்தவர் தனக்கொடி (52). இவர் ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார்கள்.

    தற்போது தனக்கொடி கருங்கல்பாளையம் காவிரிக்கரை அருகே உள்ள சோதனை சாவடியில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அருகே உள்ள டீக்கடைக்கு டீ குடிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    டீ குடித்துவிட்டு மோட்டார் சைக்கிளை திரும்பிய போது பின்னால் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும், தனக்கொடி மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக மோதின.

    இந்த விபத்தில் போலீஸ் ஏட்டு தனக்கொடிக்கு இடதுபுற தோலில் காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த வரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    இந்த விபத்து குறித்து கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×