என் மலர்
நீங்கள் தேடியது "police encounder"
சென்னையில் காவலரை வெட்டிய ரவுடி ஆனந்தன் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், அவரது வீட்டுக்கு சென்ற அதிமுக எம்.எல்.ஏ ரவி, ஆனந்தன் உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
சென்னை:
சென்னையில் ரோந்து பணிக்குச் சென்ற காவலர் ராஜவேலுவை தாக்கிய ஆனந்தன் என்ற ரவுடி கடந்த 3ஆம் தேதி அடையாறு அருகே என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். பரபரப்பை ஏற்படுத்திய இந்த என்கவுண்டர் ரவுடிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

அ.தி.மு.க எம்.எல்.ஏ ரவி
இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள ரவுடி ஆனந்தன் இல்லத்தில் இறுதி காரிய நிகழ்ச்சி நடந்தது. அதில், விருகம்பாக்கம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ ரவி கலந்து கொண்டு ஆனந்த் உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். அத்துடன், ஆனந்தனின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அ.தி.மு.க எம்.எல்.ஏ ரவியின் இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.






