search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "playing politics"

    பா.ஜனதா, திரிணாமுல் காங்கிரஸ் இரண்டுமே ஊழல் கட்சிகள் தான் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். #SitaramYechury #TMC #BJP
    புதுடெல்லி:

    சாரதா நிதி நிறுவன மோசடி குறித்து சி.பி.ஐ. விசாரணை தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் தான் சி.பி.ஐ. விசாரணை நடக்கிறது. எந்த மாநிலத்திலும் சி.பி.ஐ. விசாரணை நடத்துவதை நிர்வாகத்துக்கு எதிரானதாகவோ, மாநில ஆட்சி அதிகாரத்துக்கு எதிரானதாகவோ கருதமுடியாது. மாநில அரசின் அனுமதி இல்லாமல் சி.பி.ஐ. தாமாகவே விசாரணை நடவடிக்கையை தொடங்கினால் தான் ஆட்சேபனைக்குரியது.

    பா.ஜனதா, திரிணாமுல் காங்கிரஸ் இரண்டுமே ஊழல் கட்சிகள் தான். இரு கட்சிகளையும் சுப்ரீம் கோர்ட்டு அவர்கள் இடத்தில் நிறுத்தியுள்ளது. இந்த முறைகேட்டில் திரிணாமுல் காங்கிரஸ் தலைமைக்கு உள்ள தொடர்பு குறித்தும் விசாரிக்க வேண்டும். பா.ஜனதா ஏன் விசாரணைக்காக 5 வருடங்கள் காத்திருந்தது?

    இவ்வாறு அவர் கூறினார். #SitaramYechury #TMC #BJP 
    ×