search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pineapple fruit"

    • அரியூர் நாடு மற்றும் குண்டூர் நாடு ஆகிய 2 ஊராட்சி பகுதிகளில் மட்டும் அன்னாசி விளைந்து வருகிறது.
    • சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அன்னாசி பழம் சாகுபடி செய்து வருகின்றனர்.

    சேந்தமங்கலம்:

    கொல்லிமலையில் அன்னாசி பழம் சீசன் தொடங்கியது. இந்நிலையில் விலை உயர்வுக்காக மலைவாழ் விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தளமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. அந்த மலையில் 14 ஊராட்சி பகுதிகள் காணப்படுகிறது. அதில் குறிப்பாக அரியூர் நாடு மற்றும் குண்டூர் நாடு ஆகிய 2 ஊராட்சி பகுதிகளில் மட்டும் அன்னாசி விளைந்து வருகிறது. மற்ற பகுதிகளில் மற்ற பழங்கள் விளைந்து வருகிறது.

    மேற்குறிப்பிட்ட 2 ஊராட்சி பகுதிகளில் அன்னாசி பழத்திற்கு ஏற்ற தட்பவெப்ப நிலை நிலவுவதால் அங்கு நாட்டு ரகம் மற்றும் கியூரக அன்னாசி ஆகியவை விளைந்து வருகிறது. அதில் குறிப்பாக நாட்டு ரக அன்னாசி பழங்களே அதிக அளவில் விளைந்து வருகிறது.

    சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அன்னாசி பழம் சாகுபடி செய்து வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் ஆகிய 3 மாதங்களுக்கு அன்னாசி பழம் சீசன் நடந்து வருகிறது.

    அந்தப் பகுதிகளில் அறுவடை செய்யப்படும் அன்னாசி பழங்கள் வாகனங்கள் மூலமாக அங்குள்ள சோளக்காடு, தெம்பலம் ஆகிய சந்தை பகுதிகளுக்கு கொண்டு வந்து விற்கப்படுகிறது.

    அந்த சந்தைகளில் இருந்து மூட்டை, மூட்டையாக லாரிகளில் ஏற்றப்பட்டு வெளி மாவட்ட, மாநிலங்களுக்கு விற்பனைக்காக வியாபாரிகள் கொண்டு செல்கின்றனர்.

    கடந்த ஆண்டு ஒரு மூட்டை அதிகபட்ச விலையாக ரூ.700 முதல் ரூ.800 வரை விற்பனையானது. ஆனால் இந்தாண்டு தற்போது தொடக்கத்தில் ரூ.250 முதல் ரூ.500 வரையில் விற்பனை ஆகி வருகிறது.

    வருகிற வாரங்களில் விலையேற்றம் வந்தால் தான் அன்னாசி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இதனால் விலை உயா்வுக்காக விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    • சுந்தரேச விலாஸ் அரசு உதவி தொடக்கப் பள்ளியில் உலக அன்னாசி பழ தினம் கொண்டாடப்பட்டது.
    • மாணவ -மாணவிகள் அண்ணாசி பழம் படம் வரைந்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு சுந்தரேச விலாஸ் அரசு உதவி தொடக்கப் பள்ளியில் உலக அன்னாசி பழ தினம் கொண்டாடப்பட்டது.

    பள்ளி ஆசிரியை வசந்தா தலைமை வகித்தார்.

    பள்ளி செயலாளர் ஆறுமுகம், பொறுப்பு தலைமையாசிரியர் ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில்

    சந்திரசேகரன், சரண்யா, இலக்கியா, விஜயலட்சுமி, ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பின்பு மாணவ -மாணவிகள் அண்ணாசி பழம் படம் வரைந்தனர்.

    இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆசிரியர் வசந்தா அன்னாசி பழங்களை பரிசாக வழங்கினார்.

    பின்னர் அன்னாசி பழத்தின் முக்கியத்துவம், பயன்கள் குறித்து எடுத்து கூறப்பட்டன.

    • நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பெய்த மழையால் அன்னாசி பழம் நல்ல விளைச்சலை தந்துள்ளது.
    • தற்போது வரத்து அதிகரிப்பால் ஒரு கிலோ அன்னாசி பழம் ரூ.15-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சேலம்:

    தமிழகத்தில் ஓசூர், கொல்லிமலை, கர்நாடக மாநிலம் ெபங்களூரு, கேரளா போன்ற இடங்களில் அன்னாசி பழம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

    அன்னாசி பழம் வரத்து அதிகரிப்பு

    தற்போது நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பெய்த மழையால் அன்னாசி பழம் நல்ல விளைச்சலை தந்துள்ளது.

    இங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு வியாபாரிகள் அன்னாசி பழத்தை விற்பனைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். அதன்படி கொல்லிமலை–யில் இருந்து சேலம் மார்க்கெட்டுக்கு அன்னாசி பழம் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விலையும் குறைந்துள்ளது.

    கொல்லிமலையில் இருந்து கொண்டு வரப்பட்ட அன்னாசி பழங்கள், சேலம் கடைவீதி, மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது.

    கிலோ ரூ.15

    தற்போது வரத்து அதிகரிப்பால் ஒரு கிலோ அன்னாசி பழம் ரூ.15-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

    ×