search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Petition to Tahsildar"

    • 70-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தாசில்தார் அலுவலகத்தில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்தனர்.
    • மேல் பகுதியில் சென்று வர இயலாது என்பதால் தாசில்தார் ரவிச்சந்திரன் கீழ் பகுதிக்கு வந்து மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு மாநில துணைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாவட்ட துணை செயலாளர் கருணாகரன் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தாசில்தார் அலுவலகத்தில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்தனர். அப்போது மாற்றுத்திறனாளிகள் தாலுகா அலுவலகத்தில் மேல் பகுதியில் சென்று வர இயலாது என்பதால் தாசில்தார் ரவிச்சந்திரன் கீழ் பகுதிக்கு வந்து மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். பின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

    • மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் நாமக்கல் மாவட்டம் அமைப்பு குழுவின் சார்பில் மாவட்டத்தில் உள்ள, 8 தாலுகா அலுவலகத்தில் மனு வழங்கப்பட்டது.
    • வீட்டு மனை இல்லாத மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டுமனை கேட்டும், காலி நிலத்தில் வீடு கட்டிக் கொடுக்கவும், குடியிருக்கும் வீட்டுக்கு பட்டா கேட்டும் 350-க்கு மேற்பட்ட மனுக்கள் வழங்கப்பட்டன.

    குமாரபாளையம்:

    தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் நாமக்கல் மாவட்டம் அமைப்பு குழுவின் சார்பில் மாவட்டத்தில் உள்ள, 8 தாலுகா அலுவலகத்தில் மனு வழங்கப்பட்டது. வீட்டு மனை இல்லாத மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டுமனை கேட்டும், காலி நிலத்தில் வீடு கட்டிக் கொடுக்கவும், குடியிருக்கும் வீட்டுக்கு பட்டா கேட்டும் 350-க்கு மேற்பட்ட மனுக்கள் வழங்கப்பட்டன.

    இதில் முருகேசன், ரங்கசாமி, சக்திவேல், பராசக்தி, ராணி, சுந்தர், சண்முகம்,சண்முகம், சிவராஜ், சுப்ரமணி, அருண்குமார், துரைசாமி, பாஸ்கர் முருகேசன், சந்திரசேகரன், பழனிசாமி, பழனி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    ×