search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Perundurai student missing"

    பெருந்துறை அருகே பாலிடெக்னிக் கல்லூரி மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    சேலம் மாவட்டம் மேச்சேரி காளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவபிரகாசம் (வயது 54). விவசாயி.

    இவரது மகள் ஆஷா தேவி(22). பெருந்துறை அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.

    அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார்.விடுமுறை விடப்பட்டால் அவர் தனது தந்தைக்கு தகவல் தெரிவிப்பார். இதையடுத்து தந்தை சிவபிரகாசம் பெருந்துறைக்கு வந்து ஆஷா தேவியை அழைத்து செல்வார்.

    இந்த நிலையில் பாலி டெக்னிக்குக்கு தற்போது விடுமுறை விடப்பட்டது. ஆனால் சிவபிரசாசத்திடம் ஆஷாதேவி பேசவில்லை. எனவே சிவபிரகாசம் கடந்த 11-ந் தேதி விடுதிக்கு தொடர்பு கொண்டு பேசினார்.

    அப்போது ஆஷாதேவி 11-ந் தேதி காலையிலேயே விடுதியில் இருந்து சென்று விட்ட தகவல் தெரியவந்தது. ஆஷாதேவி ஊருக்கு வராததால் அவரது தந்தை சிவபிரகாசம் சந்தேகம் அடைந்தார்.

    எனவே அவர் பெருந்துறைக்கு வந்தார். அங்கு ஆஷாதேவியின் தோழிகளிடம் விசாரித்தார். ஆனால் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. எனவே அவர் மாயமானது தெரிய வந்தது.

    இது தொடர்பாக சிவபிரகாசம் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணி வண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் மாயமான ஆஷாதேவி கல்லூரி மாணவர் ஒருவருக்கு செல்போனில் மேசேஜ் கொடுத்துள்ளார். அதில் ‘‘நான் மணி என்பவருடன் போகிறேன்” என்று கூறப்பட்டு இருந்தது.

    எனவே மணி என்பவர் யார்? அவருக்கும் ஆஷாதேவிக்கும் என்ன தொடர்பு? அவருடன்தான் ஆஷாதேவி சென்றுள்ளாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×