search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "permanently"

    • தற்காலிக நியமன நடைமுறையை கைவிட்டு நிரந்தர ஆசிரியர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • மாவட்ட கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    கரூர்:

    தற்காலிக ஆசிரியர் நியமன நடைமுறையை கைவிட்டு, நிரந்தர ஆசிரியர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கரூர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் வீ.மோகன் தலைமையில் கரூர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.

    கரூர் வட்டாரச் செயலாளர் அருள்குழந்தை தேவதாஸ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ஜெயராஜ் இயக்க செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார். மாவட்ட பொருளாளர் தமிழரசி நன்றி கூறினார்.

    கூட்டத்தில், கரூர் மாவட்டத்தில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணி நிரவலில் சென்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததை வன்மையாக கண்டிக்கிறோம். அவர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்கிட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் போர்க்கால நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    பள்ளிகளில் ஆசிரியர்களை தற்காலிக நியமனம் செய்ய உள்ள நடைமுறையை கைவிட்டு மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்களை நிரந்தரமாக பணியமர்த்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். எண்ணும், எழுத்தும் திட்டம் குறித்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் உள்ள அனைத்து இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட வேண்டும்.

    . பயிற்சிகளில் கலந்து கொள்ளும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் மதிப்பூதியம் வழங்கவேண்டும். காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்ற கரூர் மாவட்ட சங்க நிர்வாகிகள் மீது எடுக்கப்பட்ட அனைத்து பழிவாங்கும் நடவடிக்கைகளையும் உடனடியாக கரூர் மாவட்ட கல்வித்துறை ரத்து செய்யவேண்டும். என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தற்காலிக உதவி பேராசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தற்காலிக உதவி பேராசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மனிதனின் உழைப்பை சுரண்டிக்கொண்டு, அதற்கான அங்கீகாரத்தையும் ஊதியத்தையும் அளிக்க மறுப்பதைவிட மிக மோசமான சமூக அநீதி இருக்க முடியாது. தமிழக பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் உறுப்புக் கல்லூரிகளில் தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வும், பணி நிரந்தரமும் வழங்க மறுப்பதன் மூலம் அத்தகைய சமூக அநீதியை பல்கலைக்கழக நிர்வாகங்கள் இழைத்து வருகின்றன.

    அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் 25 சதவீதத்தினர் மட்டுமே நிரந்தர பணியாளர்கள் ஆவர். மீதமுள்ள 75 சதவீத ஆசிரியர்கள் தற்காலிகப் பணியாளர்களாவர். இவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே, ஆசிரியர்களின் 6 மாத ஒப்பந்தம் முடிவடைந்த பின்னர், அடுத்த பணி நாள் முதல் புதிய ஒப்பந்தம் வழங்காமல், ஓரிரு நாட்கள் தாமதம் செய்துவிட்டு, அதன்பிறகே புதிய ஒப்பந்தம் வழங்கப்படுகிறது. இதன்மூலம் அவர்களில் ஒருவர்கூட தொடர்ந்து 3 ஆண்டுகள் பணி செய்யாமல் தடுக்கப்படுகின்றனர்.

    அண்ணா பல்கலைக்கழகம் மட்டுமின்றி தமிழகத்தின் பெரும்பான்மையான பல்கலைக்கழகங்களிலும், அவற்றின் உறுப்புக் கல்லூரிகளிலும் இதேநிலை தான் காணப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றும் தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் அனைவரையும் அவர்களின் தகுதிக்கு ஏற்ற நிலைகளில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பல்கலைக்கழகத்தின் நிதிநிலை அதற்கு இடம் தராவிட்டால் உறுப்புக்கல்லூரிகளை அரசுக் கல்லூரிகளாக மாற்றி அவற்றில் பணியாற்றும் தற்காலிக உதவிப் பேராசிரியர்களை அரசு கல்லூரி உதவி பேராசிரியர்களாகவும், மற்றவர்களை அண்ணா பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்களாகவும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மற்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் உறுப்புக் கல்லூரிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்யும் அனைத்து உதவிப் பேராசிரியர்களுக்கும் அரசு இதே முறையில் சமூகநீதி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    ×