search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "People's Welfare Workers Association"

    • தென்காசி மாவட்ட மக்கள் நலப் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் குற்றாலம் சேனைத் தலைவர் விடுதியில் நடைபெற்றது.
    • சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பால்வசந்தகுமார் சத்தியநாராயணா தீர்ப்பை முழுமையாக அமல்படுத்த வேண்டும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட மக்கள் நலப் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் குற்றாலம் சேனைத் தலைவர் விடுதியில் நடைபெற்றது.

    ஆலோசனை கூட்டத்திற்கு தமிழ்நாடு மாநில மக்கள் நலப் பணியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வே.புதியவன் தலைமை தாங்கினார். தென்காசி எம்.முத்துசாமி முன்னிலை வகித்தார். குருவிகுளம் ஆர். தர்மராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாசுதேவநல்லூர் கிருஷ்ண குமார் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில், தமிழக அரசு திட்ட ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரை மாற்றி கலைஞரால் அறிவிக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர் என்ற பெயரை சூட்ட வேண்டும், மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாதாந்திர ஊதியம் அந்தந்த மாதத்திலேயே கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,

    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பால்வசந்தகுமார் சத்தியநாராயணா தீர்ப்பை முழுமையாக அமல்படுத்த வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் அ.தி.மு.க. அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தமிழக அரசு உடனடியாக வாபஸ் பெற்று மக்கள் நலப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியத்தின் அடிப்படையில் நிரந்தர பணி வழங்க வேண்டும். மக்கள் நலப்பணியாளர்களின் கோரிக்கையை வென்றெடுக்க தொடர் போராட்டம் நடத்த மாநில மையத்தை இந்த கூட்டம் கேட்டுக் கொள்கிறது உள்ளிட்ட தீர்மான ங்கள் நிறைவேற்றப் பட்டது.

    தென்காசி மாவட்ட மக்கள் நலப் பணியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர் . அதன்படி தென்காசி மாவட்ட மக்கள் நலப் பணியாளர் சங்கத்தின் தலைவராக வாசுதேவநல்லூர் எஸ்.முருகன், மாவட்ட செயலாளராக தென்காசி எம். முத்துசாமி, மாவட்ட பொருளாளராக கீழப்பாவூர் எஸ். அருணாசலம், துணைத் தலைவர்களாக மேலநீலிதநல்லூர் பி லட்சுமி, குருவிகுளம் ஆர். தர்மராஜ், துணைச் செயலாளராக ஆலங்குளம் மு திராவிட மணி, கடையநல்லூர் கருப்பசாமி, சங்கரன்கோவில் சண்முகச்சாமி ஆகியோரும் மாநில செயற்குழு உறுப்பின ர்களாக சங்கரன்கோவில் மாரியப்பன், செங்கோட்டை பண்டாரசிவன், தென்காசி அந்தோணி செல்லதுரைச்சி, கடையநல்லூர் ராஜேந்திரன் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தின் தொடர் நடவடிக்கைகள் பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் பேசினார்கள். முடிவில் தென்காசி மாவட்ட மக்கள் நலப் பணியாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வாசுதேவநல்லூர் எஸ்.முருகன் நன்றி கூறினார்.

    ×