search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "People protested"

    • ரெயில்வே நிர்வாகத்தை கண்டித்து தண்ணீரில் இறங்கி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    • தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது லாந்தை கிராமம். இங்குள்ள ரெயில்வே தரை பாலத்தில் மழை காலங்களில் தண்ணீர் தேங்குவதால் பொதுமக்கள் நடமாட முடியாமல் சிரமம் ஏற்படுகிறது.

    இதன் காரணமாக லாந்தை, கண்ணனை, திருப்பணை, பெரிய தாம ரைக்குடி, சிறிய தாமரைக்குடி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்படு கின்றனர்.

    லாந்தை கிராமத்தில் நடைபெற்று வரும் ரெயில்வே பால பணிகள் 11 ஆண்டுகளாகியும் முடிவடையாமல் உள்ளது. இதனால் சுரங்கப்பாதையில் மழைகாலங்களில் தண்ணீர் முழங்கால் அளவிற்கு தேங்கி நிற்கிறது.

    இதனால் லாந்தை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் ராமநாதபுரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. விவசாயிகள், பள்ளி மாணவ, மாணவிகள் பாலத்தில் ஏறி, இறங்கி ரெயில்ேவ தண்ட வாளத்தை கடந்து செல்ல வேண்டியுள்ளது. இதுகுறித்து லாந்தை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களின் சார்பில் ரெயில்வே நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என கூறப்படுகிறது.

    இந்தநிலையில் சமீபத்தில் பெய்த மழையால் சுரங்கப்பாதையில் தண்ணீர் முழுவதுமாக தேங்கி நிற்கிறது. இதைத் தொடர்ந்து இன்று லாந்தை கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர் சுரங்கப்பாதை தண்ணீருக்கு இறங்கி நின்று ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து ராமநாதபுரம் தாசில்தார் ஸ்ரீதரன் மாணிக்கம், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, வருவாய்த்துறையினர், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொது மக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் இதில் சமரசம் ஏற்படவில்லை. இதையடுத்து ரெயில்வே நிர்வாகத்தின் தரப்பில் அதிகாரிகள் வந்து பேச்சு நடத்தினால் மட்டுமே ஆர்ப்பாட்டத்தை கைவிடுவோம் என்று கூறி தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×