என் மலர்
நீங்கள் தேடியது "Pensioners can"
- 7,200-க்கும் மேற்பட்டோர் மாதாந்திர ஓய்வூதியம் பெறுகின்றனர்.
- ஆயுள் சான்றை உரிய ஆவணங்களை பதிவேற்றி இணைய வழி விண்ணப்பிக்க வேண்டும்.
ஈரோடு:
கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலா ளர்கள் தொடர்பான 18 அமைப்புசாரா தொழிலா ளர்கள் நலவாரியங்களில் பதிவு, புதுப்பித்தல், கேட்பு மனுக்கள் போன்ற அனைத்து விண்ணப்பங்க ளும் tnuwwb.tn.gov.in என்ற தொழிலாளர் துறை இணைய தளம் வாயிலாக பெறப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் இந்நலவாரியங்களில் 60 வயது நிறைவடைந்த 7,200-க்கும் மேற்பட்டோர் ஓய்வூதியதாரர்களாக மாதாந்திர ஓய்வூதியம் பெறுகின்றனர்.
ஆண்டு தோறும் ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்றை உரிய ஆவணங்களை பதிவேற்றி இணைய வழி விண்ண ப்பிக்க வேண்டும்.
2023–-24-ம் ஆண்டுக்காக வரும் 30-ந் தேதிக்குள் https://tnuwwb.tn.gov.in/applicationlives/applicationlive என்ற இணைய தள முகவரியில் சமர்பிக்க வேண்டும்.
ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, ஓய்வூதிய உத்தரவு நகல், புகைப்படம்–1, வங்கி புத்தக நகல், நடப்பு மாதம் வரை வரவு–செலவு பரிவர்த்தனை விபரம் அடங்கிய விபரங்களை பதிவு பெற்ற தொழிற்சங்கம் அல்லது இ–சேவை மையம் அல்லது சி.எஸ்.சி. கணினி மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலக தொலைபேசி எண்:0424-2275591, 2275592 மூலம் அல்லது அலுவலக மின்னஞ்சல்: losserode@gmail.com மூலம் தொடர்பு கொள்ளலாம்.
இத்தகவலை, தொழிலா ளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) முருகேசன் வெளியி ட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.