என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Peacocks are a nuisance"

    • நெல், சோளம், மக்காச்சோளம், கேழ்வரகு, கம்பு உள்ளிட்ட பல்வேறு தானிய வகைகளை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர்.
    • தானியங்களை கொத்தி நாசப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஆனங்கூர், அய்யம்பாளை யம், சின்ன மருதூர், கண்டி பாளையம், கபிலர்மலை, பெரிய சோளிபாளையம், சின்ன சோளிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெல், சோளம், மக்காச்சோளம், கேழ்வரகு, கம்பு உள்ளிட்ட பல்வேறு தானிய வகைகளை விவசா யிகள் பயிர் செய்துள்ளனர்.

    இந்நிலையில் இந்த பகுதிகளில் வசிக்கும் மயில்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இவை விவசாயிகள் பயிர் செய்துள்ள பகுதிகளுக்கு சென்று, தானியங்களை கொத்தி நாசப்படுத்தி வரு கிறது. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர்.

    விவசாயத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வரும் நிலையில், மயில்களின் தொல்லையால் மேலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே வனத்து றையினர் இப்பகுதியில் உள்ள மயில்களை பிடித்து வனப்பகுதிகளுக்கு கொண்டு சென்று விட்டு விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மல்லியக்கரை-ஆத்தூர் சாலையில் ரெயில்வே மேம்பால பணிகள் முடியும் வரை கனரக வாகனங்கள் மாற்றுப்பாதை
    • ராசிபுரம்-ஆத்தூர் செல்லும் கனரக வாகனங்கள் வாழப்பாடி வழி

    சேலம்

    சேலம் மாவட்டம் மல்லியக்கரை-ஆத்தூர் சாலையில் ரெயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி வருகிற 30-ந் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இருசக்கர மற்றும் இலகுரக வாகனங்கள் அருகில் உள்ள ரெயில்வே கீழ்பாலத்தை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    அதாவது, ராசிபுரம்-ஆத்தூர் செல்லும் கனரக வாகனங்கள் வாழப்பாடி வழியாகவும் (வாழப்பாடி திம்மநாயக்கன்பட்டி சாலை), தம்மம்பட்டி-ஆத்தூர் செல்லும் கனரக வாகனங்கள் தம்மம்பட்டி-கெங்கவல்லி சாலையை பயன்படுத்தி மஞ்சினி வழியாக ஆத்தூருக்கு செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    எனவே, மல்லியக்கரை-ஆத்தூர் சாலையில் ரெயில்வே மேம்பால பணிகள் முடியும் வரை கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையை பயன்படுத்திக்கொள்ளு மாறு தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின் சேலம் கோட்ட பொறியாளர் தேவகி தெரிவித்துள்ளார்.

    ×