search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "peace procession"

    கருணாநிதி மறைவையொட்டி திமுக சார்பில் நகர பொறுப்பாளர் அண்ணாதுரை தலைமையில் கருணாநிதி படத்துடன் அமைதி ஊர்வலம் நடந்தது.

    கீரனூர்:

    கீரனூரில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி தி.மு.க. சார்பில் நகர பொறுப்பாளர் அண்ணாதுரை தலைமையில் கருணாநிதி படத்துடன் அமைதி ஊர்வலம் நடந்தது. பின்னர் இரவில் கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் பேரூராட்சி தலைவர் ரவிக்குமார், துணை தலைவர் பழனி, இம்தியாஸ், மணிராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அனுதாபம் தெரிவிக்கும் வகையில் மாலை வரை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. பஸ்கள் ஏதும் ஓடாததால் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

    ஆட்டோ, டாக்சி ஓட்டுனர் சங்கம், விவசாய சங்கம், அரிமா சங்கம் என அனைத்து தரப்பினரும் கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    தொம்மாவூரில் மாவட்ட தொண்டர் அணிஅமைப்பாளர் கராத்தே முத்து தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மவுன ஊர்வலம் நடந்தது.

    இதில் பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதனர், கீரனூர் அடுத்த குளத்தூரில் தி.மு.க. கிளை கழகம் சார்பில் செயலாளர் சேகர் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் கடைவீதி பகுதியில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் பெரியசாமி, சரத்துகுமார், ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பேராவூரணியில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. #karunanidhideath #dmk
    பேராவூரணி:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக ஊர்வலம் பேராவூரணி சேது ரோடு பயணியர் மாளிகையில் தொடங்கியது. பின்னர் அண்ணா சாலை, அறந்தாங்கி சாலை வழியாக புதிய பேருந்து நிலையம் சென்று வேதாந்தம் அரங்கில் நிறைவுபெற்றது.

    அதைத் தொடர்ந்து அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட நெசவாளர் அணி வேலுச்சாமி தலைமை வகித்தார். பேராவூரணி எம்.எல்.ஏ கோவிந்தராசு, முன்னாள் எம்.எல்.ஏ சிங்காரம், தி.க சார்பில் சிதம்பரம், இ.கம்யூனிஸ்ட் சார்பில் பாலசுந்தரம், மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்ட் கருப்பையா, விடுதலை சிறுத்தைகள் அரவிந்தகுமார், தி.மு.க. ஒன்றிய அவைத் தலைவர் நீலகண்டன், முன்னாள் கவுன்சிலர்கள் கே.பி.குமணன், அல்லிராணி சேகர், முன்னாள் ஒன்றிய பொருப்பாளர் தங்கவேலு, பன்னீர், ஊராட்சி செயலர் குட்டியப்பன், கிளை கழக செயலாளர் மணிவண்ணன், முன்னாள் ஒன்றிய பிரதிநிதி சவுந்தர ராஜன் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள், வர்த்தகர்கள், அனைத்து கட்சியினர் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கருணா நிதி படத்துக்கு அஞ்சலி செலுத் தினர். அதைத் தொடர்ந்து அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். #karunanidhideath #dmk
    ×