search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pasumpon muthuramalinga theve"

    கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 111-வது ஜெயந்தி விழா மற்றும் 56-வது குருபூஜை விழாவையொட்டி தலைவர்கள் மரியாதை செலுத்தினர். #ThevarJayanthi #EdappadiPalaniswami #OPS
    கமுதி:

    கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடம் உள்ளது. இங்கு தேவரின் 111-வது ஜெயந்தி விழா மற்றும் 56-வது குருபூஜை விழா கடந்த 28-ந்தேதி தொடங்கியது.

    இன்று (30-ந்தேதி) குரு பூஜை விழா நடைபெற்றது. பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் தேவர் நினைவிடம் வந்து அஞ்சலி செலுத்தினர்.

    காலை 9 மணிக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

    அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், டாக்டர் மணிகண்டன், காமராஜ், ஓ.எஸ்.மணியன், டாக்டர் விஜயபாஸ்கர், பாஸ்கரன் மற்றும் அன்வர்ராஜா எம்.பி. மற்றும் பலர் இதில் பங்கேற்றனர்.

    முன்னதாக மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பங்கேற்பதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மதுரை வந்தார். கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் கட்சியினருடன் பசும்பொன் புறப்பட்டார். அங்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் தேவர் நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினார்.

    முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், பெரியகருப்பன், தங்கம் தென்னரசு, சத்தியமூர்த்தி, சுப.தங்கவேலன், முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, ஆகியோரும் அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் பசும்பொன் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் பல்வேறு கட்சி, சமுதாய தலைவர்களும் பசும்பொன்னில் மரியாதை செலுத்தினர். #ThevarJayanthi #EdappadiPalaniswami #OPS
    ×