search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "passenger crowd"

    • 2028-ம் ஆண்டில் பயணிகளின் எதிர்கால தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மெட்ரோ ரெயில் சேவையை அதிகரிக்க வேண்டிய நிலை உள்ளது.
    • பல தரப்பு நிதி நிறுவனங்களிடம் இருந்து நிதி பெறப்பட்டு கூடுதல் ரெயில்களை இயக்க அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுவதால் நெரிசல் இல்லாமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடிகிறது. முதல் கட்ட மெட்ரோ ரெயில்கள் 2 வழித்தடங்களில் இயக்கப்படுகிறது.

    தற்போது சராசரியாக தினமும் 2½ லட்சம் பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்கின்றனர். அரசு அலுவலகங்கள், ஐ.டி. நிறுவனங்கள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் மெட்ரோ ரெயிலை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் மெட்ரோ ரெயில்களில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.

    54 கி.மீ. தூரமுள்ள முதல் கட்ட மெட்ரோ ரெயில் சேவையில் 4 பெட்டிகளை கொண்ட 54 ரெயில்கள் பயன்பாட்டில் உள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 2 லட்சத்து 48 ஆயிரம் பயணிகள் பயணம் செய்தனர்.

    நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நெரிசல் ஏற்படுகிறது. 2028-ம் ஆண்டில் பயணிகளின் எதிர்கால தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மெட்ரோ ரெயில் சேவையை அதிகரிக்க வேண்டிய நிலை உள்ளது.

    கூடுதலாக ரெயில்கள் வாங்கி சேவையை அதிக ரித்தால் தான் நெரிசலை குறைக்க முடியும் என ஆய்வு செய்யப்பட்டது.

    அதன் அடிப்படையில் 6 கார்களை கொண்ட 28 ரெயில்களை ரூ.2820 மதிப்பீட்டில் வாங்க திட்ட மிடப்பட்டு உள்ளது. தற்போது 6 பெட்டிகளை கொண்ட 5 ரெயில்களை வாங்க முடிவு செய்துள்ளது.

    இதற்காக ரூ.300 கோடி கடன் வாங்குகிறது. இதற்கான ஆவண பணிகள் தொடங்கி உள்ளன. கடன் வாங்கக்கூடிய டெண்டர் இறுதி செய்யப்பட்டு உள்ளது. 30 ரெயில் பெட்டிகளை வாங்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் நடவடிக்கையினை மேற் கொண்டு வருகிறது.

    இது குறித்து மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் எம்.ஏ.சித்திக் கூறுகையில், தற்போது உள்ள 4 பெட்டிகள் கொண்ட ரெயில்களில் கூடுதல் பெட்டிகளை சேர்க்க முடியாது. ஏன் என்றால் இந்த செயல்முறை தினசரி செயல்பாடுகளை பாதிக்கும். பல தரப்பு நிதி நிறுவனங்களிடம் இருந்து நிதி பெறப்பட்டு கூடுதல் ரெயில்களை இயக்க அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது" என்றார்.

    • தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை கடந்த 4 நாட்களாக கொண்டாடப்பட்டது.
    • தற்போது பொங்கல் விடுமுறை முடிந்தது. இதையொட்டி சொந்த ஊருக்கு வந்தவர்கள் மீண்டும் தாங்கள் பணி செய்யும் இடத்திற்கு திரும்பி வருகின்றனர்.

    சேலம்:

    தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை கடந்த 4 நாட்களாக கொண்டாடப்பட்டது. தொடர் விடுமுறையை யொட்டி வெளியூர்களில் தங்கி பணி செய்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், உறவினர்கள் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.

    தற்போது பொங்கல் விடுமுறை முடிந்தது. இதையொட்டி சொந்த ஊருக்கு வந்தவர்கள் மீண்டும் தாங்கள் பணி செய்யும் இடத்திற்கு திரும்பி வருகின்றனர். இதன் காரணமாக நேற்று மாலை முதல் சேலம் புதிய பஸ் நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அதிகளவில் இருந்தது.

    வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதால் பஸ் நிலையத்தில் பஸ்களின் எண்ணிக்கை அதிகளவில் காணப்பட்டது. இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    குறிப்பாக சென்னை, வேலூர், விழுப்புரம், திருச்சி, கோவை, திருப்பூர், மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு மிக அதிகப்படியான மக்கள் பயணம் செய்தனர். நள்ளிரவு 1 மணி வரை பயணிகளின் கூட்டம் இருந்து கொண்டே இருந்தது. அதற்கு ஏற்ப பஸ்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது.

    இதேபோல் இன்று அதிகாலை வெளியூரில்களில் இருந்து வந்த பயணிகளின் கூட்டமும் அதிகளவில் காணப்பட்டது. விடுமுறைக்கு சென்றவர்கள் பணிக்கு திரும்பியதால், புதிய பஸ் நிலைய பகுதியில் உள்ள ஓட்டல்களில் விற்பனை களைக்கட்டியது. 

    ×