search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parthenia plant"

    • விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு கலெக்டர் கிராந்தி குமார் தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    கோவை.

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார்தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுவை கலெக்டரிடம் வழங்கினர்.

    விவசாயிகள் அளித்துள்ள மனுவில் கூறியிரு–ப்பதாவது:-

    கோவை மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் பார்த்தீனிய செடி அதிக அளவில் வளர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மட்டுமல்லாமல் பொது–மக்களும், கால்நடைகளும் பாதிப்புக்கு உள்ளாகிறது.

    விவசாய நிலத்தில் பார்த்தீனிய செடி வளர்வதால் மஞ்சள், தக்காளி, வாழை, தென்னை போன்ற செடிகள் பாதிக்கப்படுவதோடு, அதனை சாப்பிடும் கால்நடைகளும் பாதிக்கப்படுகின்றன.

    இதுதவிர பொது–மக்களும் நோய்வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

    எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக விவசாய நிலங்களில் நச்சுத்தன்மையுடன் வளரக்கூடிய பார்த்தீனியச் செடியை முழுவதுமாக அகற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா, மாவட்ட விவசாய துறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×