என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Parthenia plant"
- விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு கலெக்டர் கிராந்தி குமார் தலைமை தாங்கினார்.
- கூட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கோவை.
கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார்தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுவை கலெக்டரிடம் வழங்கினர்.
விவசாயிகள் அளித்துள்ள மனுவில் கூறியிரு–ப்பதாவது:-
கோவை மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் பார்த்தீனிய செடி அதிக அளவில் வளர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மட்டுமல்லாமல் பொது–மக்களும், கால்நடைகளும் பாதிப்புக்கு உள்ளாகிறது.
விவசாய நிலத்தில் பார்த்தீனிய செடி வளர்வதால் மஞ்சள், தக்காளி, வாழை, தென்னை போன்ற செடிகள் பாதிக்கப்படுவதோடு, அதனை சாப்பிடும் கால்நடைகளும் பாதிக்கப்படுகின்றன.
இதுதவிர பொது–மக்களும் நோய்வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக விவசாய நிலங்களில் நச்சுத்தன்மையுடன் வளரக்கூடிய பார்த்தீனியச் செடியை முழுவதுமாக அகற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா, மாவட்ட விவசாய துறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்