என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "parliyar"

    • 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்,

    -

    திருப்பூர் மாவட்டம் கரடிவாவி மல்லே கவுண்டன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தாராம் (42). இவர் தனது நண்பர்களான அன்னூரைச்சேர்ந்த வேல்மு ருகன் (33), அமீனுல்லா (45), பிரவீன் குமார் (32) உள்ளி ட்டோருடன் காரில் ஊட்டி க்கு சுற்றுலா சென்றார்.

    பின்னர் நேற்று இரவு அவர்கள் மீண்டும் காரில் ஊர் திரும்பி கொண்டு இருந்தனர். காரை சாந்தாராம் ஓட்டி வந்தார். பர்லியார் மரப்பாலம் அருகேவந்தபோது கார் திடீரென விபத்துக்கு ள்ளானது. கார் நிலை தடுமாறி வலது புற தடுப்பு ச்சுவரில் மோதி சுமார் 20 அடி பள்ள த்தில் கவிழ்ந்து விபத்துக்கு ள்ளானது.

    இதனையடுத்து அக்கம்ப க்கத்தினர் அவர்களை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் காரில் பின்புறம் அமர்ந்திருந்த பிரவீன் குமார் என்பவர் தலைப்பகுதியில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

    படுகாயமடைந்த சாந்தாராம், வேல்முருகன், அமீனுல்லா உள்ளிட்டோர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.

    ×