search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "parikkal"

    பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் தினமும் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு திருமஞ்சனம் நடத்தப்படுகிறது. இந்த திருமஞ்சனத்தை நேரில் பார்ப்பது மிகவும் நன்மை தரக்கூடியதாக கருதப்படுகிறது.
    பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் தினமும் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு திருமஞ்சனம் நடத்தப்படுகிறது. காலை 9 மணி முதல் 10.30 மணி வரை திருமஞ்சனம் நடைபெறும். பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு இந்த திருமஞ்சனம் நடத்தப்படுகிறது.

    ஒரே வரிசையில் உள்ள மூன்று லட்சுமி நரசிம்மர் ஆலயங்களில் தினமும் திருமஞ்சனம் நடத்தப்படுவது பரிக்கல்லில் மட்டும் தான். இந்த திருமஞ்சனத்தை நேரில் பார்ப்பது மிகவும் நன்மை தரக்கூடியதாக கருதப்படுகிறது.

    இந்த திருமஞ்சனத்துக்கு பக்தர்கள் பொருட்கள் வாங்கி கொடுக்கலாம். பால், தயிர், வாசன திரவியங்கள் போன்றவற்றை எவ்வளவு முடியுமோ அவ்வளவு வாங்கிக்கொடுக்கலாம்.

    பக்தர்கள் வாங்கிக்கொடுத்தாலும், கொடுக்கவிட்டாலும் தினசரி திருமஞ்சனம் தடையில்லாமல் நடத்தப்படுகிறது. பக்தர்கள் உதவி கிடைக்காதபோது ஆலயத்தின் சார்பிலேயே திருமஞ்சனம் செய்து விடுகிறார்கள். இந்த திருமஞ்சனத்தை பார்ப்பதற்காகவே சில பக்தர்கள் காலை நேரத்தில் பரிக்கல் ஆலயத்துக்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

    சென்னை மற்றும் தொலைதூரங்களில் இருந்து மூன்று லட்சுமி நரசிம்மர் ஆலயங்களையும் தரிசிக்க வருபவர்கள் இந்த திருமஞ்சனத்தை பார்க்கவேண்டும் என்பதற்காகவே பரிக்கல் ஆலயத்தை முதல் ஆலயமாக தேர்ந்தெடுத்து வழிபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    பரிக்கல், பூவரசங்குப்பம், சிங்கிரிக்குடி ஆகிய மூன்று தலங்களில் உள்ள நரசிம்மர்கள் மாறுபட்ட அம்சங்களில் காணப்படுகிறார்கள். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பரிக்கல், பூவரசங்குப்பம், சிங்கிரிக்குடி ஆகிய மூன்று தலங்களில் உள்ள நரசிம்மர்கள் மாறுபட்ட அம்சங்களில் காணப்படுகிறார்கள். சிங்கிரிக்குடி ஆலயத்தில் இருக்கும் நரசிம்மர் மிகமிக ஆக்ரோஷமான நிலையில் இருப்பவர். இரணியனை வதம் செய்தபோது எந்த அளவு அவர் கோபமாக இருந்தாரோ அந்த அளவுக்கு இந்த தலத்திலும் ஆக்ரோஷமாக இருப்பதாக கருதப்படுகிறது.

    இதனால் தான் சிங்கிரிக்குடி தலத்தில் கருவறையில் நரசிம்மர் மட்டும் இருக்கிறார். ஒரே நேர் கோட்டில் மூன்று நரசிம்மர் ஆலயங்களில் இந்த சிங்கிரிக்குடி தலத்துக்குதான் முதலில் சென்று வழிபட வேண்டும் என்பதை ஐதீகமாக வைத்துள்ளனர்.

    அதன்பிறகு 2-வ தாக பூவரசங்குப்பம் தலத்துக்கு சென்று லட்சுமி நரசிம்மரை வழி பட வேண்டும். இந்த தலத்தில் கருவறை யில் நரசிம்மரும், லட்சுமியும் ஒருவரை ஒருவர் ஆலிங் கானம் செய்தப்படி இருப்பது மிக சிறப்பாக கருதப்படுகிறது. இந்த தலத்தில் வழிபட்டால் இல்லற வாழ்வுக்கு தேவையான அத்தனை சுகங்களையும் லட்சுமி நரசிம்மர் தருவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

    அடுத்து 3-வது தலமான பரிக்கல் ஆலயத்திலும் கருவறையில் நரசிம்மரும், லட்சுமியும் ஒருங்கே அமர்ந்துள்ளனர். நரசிம்மரின் தொடையில் லட்சுமி அமர்ந்து இருந்து அருள்பாலிகிறார். அவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சமம் என்ற அளவில் முழுமையான மகிழ்ச்சியுடன் உள்ளனர். எனவே அவர்களை வழிபட்டால் பக்தர்களுக்கு இல்லற வாழ்வுக்கு தேவையான முழுமையான மகிழ்ச்சி கிடைப்பது ஐதீகமாகும்.
    ×