search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Paramasivampalayam"

    • கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவ சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • 250 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மங்கலம் :

    கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவ சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பரமசிவம்பாளையம் பகுதியில் நடைபெற்றது. முகாமிற்கு சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகா பழனிச்சாமி தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் டாக்டர் உமாசங்கர், சாமளாபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டிவரதராஜன் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் சாமளாபுரம் கால்நடை மருத்துவர் பிரியலட்சுமி, சாமிக்கவுண்டம்பாளையம் கால்நடை மருத்துவர் செந்தில்முருகன், மற்றும் கால்நடை உதவியாளர் காயத்ரி உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில் மாடுகளுக்கு பெரியம்மை தடுப்பூசியும், நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசியும், கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.மொத்தமாக 250 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இம்முகாமில் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர் மேனகா பாலசுப்பிரமணி, மைதிலிபிரபு மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முகாமில் சிறந்த கிடாரிகன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இம்முகாமில் கால்நடை புத்தாக்கப்பயிற்சியில் கலந்து கொண்ட 25 விவசாயிகளுக்கு தலா 100ரூபாய் வழங்கப்பட்டது.

    ×