என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » panruti temple undiyal money robbery
நீங்கள் தேடியது "Panruti temple undiyal money robbery"
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கோவில் உண்டியலை உடைத்து மர்மநபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வ.உ.சி.தெருவில் மாரியம்மன்கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பண்ருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் பூஜைகளை முடித்து விட்டு கோவில் பூசாரி சங்கர் கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். இதைநோட்டமிட்ட மர்ம மனிதர்கள் சிலர் நேற்று நள்ளிரவு கோவிலின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இன்று காலை கோவிலை சுத்தம் செய்வதற்காக வந்த தொழிலாளி ஒருவர் கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளைபோய் இருந்தது.
இதுகுறித்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் பண்ருட்டி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சப்-இன்ஸ்பெக்டர் லூயிஸ்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கொள்ளை நடந்த கோவிலில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர். #Tamilnews
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வ.உ.சி.தெருவில் மாரியம்மன்கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பண்ருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் பூஜைகளை முடித்து விட்டு கோவில் பூசாரி சங்கர் கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். இதைநோட்டமிட்ட மர்ம மனிதர்கள் சிலர் நேற்று நள்ளிரவு கோவிலின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இன்று காலை கோவிலை சுத்தம் செய்வதற்காக வந்த தொழிலாளி ஒருவர் கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளைபோய் இருந்தது.
இதுகுறித்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் பண்ருட்டி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சப்-இன்ஸ்பெக்டர் லூயிஸ்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கொள்ளை நடந்த கோவிலில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர். #Tamilnews
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X