search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Panguni Uthra Chariot"

    • ஸ்ரீலஸ்ரீ ராமநாதசிவாச்சாரியார் சிறப்பு பூஜை நடத்தினார்.
    • பக்தர்கள் தேர் மீது உப்பு, மிளகு தூவி வணங்கினர்.

    சென்னிமலை, 

    சென்னிமலை முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதையொட்டி நேற்று இரவு திருக்கல்யாணம் நடந்தது.

    பின்பு இன்று அதிகாலை உற்சவருக்கு சிறப்பு அபிஷேகமும், வழிபாடும் நடந்தது. அதை தொடர்ந்து சாமி புறப்பாடு காலை 6.10 மணிக்கு நடைபெற்றது.

    சாமி தேர் நிலையை மூன்று முறை வலம் வந்தது. தேர்நிலையில் வைக்கப்பட்டு தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாதசிவாச்சாரியார் சிறப்பு பூஜை நடத்தினார். அதை தொடர்ந்து காலை 6.20 மணிக்கு தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது.

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் இழுத்தனர். அப்போது கூடியிருந்த பக்தர்கள் அரோகரா... அரோகரா... முருகனுக்கு அரோகரா... கந்தனுக்கு அரோகரா... என பக்தி கோஷங்களை எழுப்பினர்கள்.

    பின்பு தேர் கிழக்கு, தெற்கு, மேற்கு, ரத வீதிகள் வழியாக வலம் வந்து வடக்கு வீதியில் நிறுத்தப்பட்டது. பக்தர்கள் தேர் மீது உப்பு, மிளகு தூவி வணங்கினர். பின்பு இன்று மாலை தேர்நிலை சேரும்.

    தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். நாளை வியாழக்கிழமை காலை பரிவேட்டை நிகழ்ச்சியும். இரவு தெப்பத்தேர் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    வெள்ளிக்கிழமை காலை 8மணிக்கு மகாதரிசன நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் பங்குனி உத்திர விழா நிறைவு பெறுகிறது.

    ×