search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palm Leaves"

    • பொங்கல் திருநாள் வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படு கிறது. வீட்டுக்கு முன்பு அடுப்பு வைத்து பொங்கலிடுவார்கள்.
    • பொங்கல் பொங்கி வரும்வேளையில் காய்ந்த பனை ஓலைகளை வைத்து பொங்கலோ பொங்கல் என்று மங்கல குரல் எழுப்புவார்கள். பொங்கல் வைப்பதற்கு மிகவும் உறுதுணையாக இருப்பது காய்ந்தபனை ஓலைகள்ஆகும்.

    உடன்குடி:

    பொங்கல் திருநாள் வருகிற 15-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படு கிறது. வீட்டுக்கு முன்பு அடுப்பு வைத்து பொங்கலிடு வார்கள். பொங்கல் பொங்கி வரும்வேளையில் காய்ந்த பனை ஓலைகளை வைத்து பொங்கலோ பொங்கல் என்று மங்கல குரல் எழுப்புவார்கள். பொங்கல் வைப்பதற்கு மிகவும் உறுதுணையாக இருப்பது காய்ந்தபனை ஓலைகள்ஆகும்.

    இதனால் உடன்குடி வட்டாரபகுதிக்கு உட்பட்ட குலசேகரன்பட்டினம், பரமன் குறிச்சி, மெஞ்ஞான புரம், கொட்டங்காடு, லட்சுமி புரம், மெய்யூர். தண்டுபத்து செட்டியாபத்து, சீர் காட்சி, பிச்சுவிளைமற்றும் சுற்றுப்புற கிராமங்கள் ஏராளமான இடங்களில் பனை ஓலைகள் குவியல் குவியலாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. சிலர் சைக்கிள் மற்றும் தலை சுமையிலும் பனை ஓலைகளை வைத்துக் கொண்டு தெருத்தெருவாக சென்று விற்பனை செய்து வரும் காட்சியை காண முடிகிறது. ஒரு ஒலை ரூ. 20 வரை விற்பனை செய்யப்படுகிறது, மட்டை யுடன் இருக்கும் பனை ஓலைகளுக்கு கிராக்கி அதிகமாக உள்ளது.

    ×