search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pakistan cabinet"

    பஞ்சாப் மந்திரி சித்துவை கண்டித்து பா.ஜனதா கட்சி சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சென்னை:

    தமிழர்கள் பற்றியும், தமிழர்களின் உணவு முறைகள் பற்றியும் இழிவாக பேசியதாக பஞ்சாப் மந்திரி சித்துவை கண்டித்து பா.ஜனதா கட்சி சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    ‘‘தமிழர்கள் பற்றியும், தமிழர்களின் உணவு முறை பற்றியும் பஞ்சாப் மந்திரி நவ்ஜோத் சிங் சித்து இழிவாக பேசியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் யாரும் இதை கண்டித்து அறிக்கைவிடவில்லை.

    சித்து கூட்டணி கட்சியான காங்கிரசை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு எதிராக தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் தமிழ் உணர்வு மிக்க, தமிழர்கள் மீது மதிப்பு வைத்துள்ள பா.ஜனதா போராட்டம் நடத்துகிறது.

    தமிழர்களை இழிவாக பேசிய சித்து மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டும். மேலும் மன்னிப்பு கேட்க வேண்டும். இலங்கையில் தமிழர் படுகொலைக்கு காங்கிரஸ் துணை போனது. இதனால் 1½ லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். எனவே தமிழர்கள் பற்றி பேச காங்கிரஸ் கட்சிக்கு அருகதை கிடையாது.

    அதே நேரத்தில் இலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்கு பா.ஜனதா கட்சி பாடுபட்டு வருகிறது. தமிழ் இனத்தை காக்க தொடர்ந்து பாடுபடு வோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் பா.ஜனதா கட்சியின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் தனஞ்செயன், மீனவர் அணி தலைவர் சதீஷ்குமார், நிர்வாகி காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சபரிமலை விவகாரம் குறித்து தமிழிசை சவுந்தர ராஜன் கூறியதாவது:-

    சபரிமலைக்கு செல்லும் பெரும்பாலான அய்யப் பக்தர்கள் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஏற்கவில்லை. கேரளா மற்றும் தமிழ்நாட்டில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. மக்களின் உணர்வுகளுக்கு செவிசாய்க்க வேண்டியதுதான் அரசாங் கத்தின் கடமை.

    நாங்கள் சட்டத்துக்கு உட்பட்டவர்கள். சட்டத்தை மீறமாட்டோம் என்று கூறும் கேரள முதல் மந்திரியும், அவர் சார்ந்த கட்சியினரும் சட்டத்துக்கு எதிராக போராடியது இல்லையா? ஜல்லிக்கட்டு போராட்டம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிரானது தானே. அதை கம்யூனிஸ்டுகள் ஆதரிக்க தானே செய்தார்கள். எத்தனை தொழிற்சாலைகளில் கோர்ட்டுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார் கள்.

    இப்போது சபரிமலை விவகாரத்தில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்ய மாட்டோம் என்று பிடி வாதமாக இருப்பது அவர் களது இந்து விரோத உணர்வை வெளிப்படுத்தி உள்ளது. பக்தர்களின் உணர்வுக்கு செவிசாய்க்கா விட்டால் அதற்குரிய பலனை ஆட்சியாளர்கள் அனுபவித்தே தீர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    பாகிஸ்தான் மீது மிகவும் பற்றுள்ளவராக சித்து இருப்பதால் பஞ்சாப் அமைச்சரவையில் இருந்து விலகி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மந்திரி சபையில் சேர்ந்து கொள்ளலாம் என்று பாஜக கருத்து தெரிவித்துள்ளது. #BJP #PakistanCabinet

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் நவ்ஜோத்சிங் சித்து.

    ஓய்வுக்கு பிறகு டெலிவி‌ஷன் வர்ணனையாளராக இருந்த அவர் அரசியலுக்கு சென்றார். தற்போது காங்கிரசில் இருக்கும் சித்து பஞ்சாப் மாநில அரசில் கலாச்சார துறை மந்திரியாக இருக்கிறார்.

    இந்த நிலையில் தமிழக கலாச்சாரத்தையும், பாகிஸ்தான் கலாச்சாரத்தையும் ஒப்பிட்டு சித்து பேசினார். இமாச்சல பிரதேச மாநிலம் கசோலியில் நடந்த இலக்கிய திருவிழாவில் அவர் பேசியதாவது:-

    தமிழகத்தின் கலாச்சாரம் மொழி, உணவுகள் எனக்கு ஒத்து வராது. என்னால் தினமும் இட்லி சாப்பிட இயலாது. ஆனால் பஞ்சாப் கலாச்சாரமும், பாகிஸ்தான் கலாச்சாரமும் மொழியும், உணவு பழக்க வழக்கமும் ஒரே மாதிரியாக இருக்கிறது. இதனால் தென் இந்தியாவை விட பாகிஸ்தான் மக்களுடன் வாழ்வது எனக்கு எளிதானது.

    இவ்வாறு சித்து பேசினார்.

    சித்துவின் இந்த பேச்சுக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

     


    இந்த நிலையில் பா.ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பத் பத்ரா இது குறித்து டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாகிஸ்தான் மீது மிகவும் பற்றுள்ளவராக சித்து இருப்பதால் பஞ்சாப் அமைச்சரவையில் இருந்து விலகி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மந்திரி சபையில் சேர்ந்து கொள்ளலாம். அதுதான் அவருக்கு எங்களுடைய கனிவான அறிவுரையாகும்.

    சித்து தனது பேச்சில் தென் இந்தியாவை விட பாகிஸ்தான் உயர்ந்தது எனது தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானுடன் இணைந்து சதி திட்டத்தில் ஈடுபட்டுள்ளது தெளிவாகிறது. நாட்டை தென் இந்தியா, வட இந்தியா என்று பிரிப்பதே காங்கிரசின் சதி திட்டமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான ஜி.வி.எல். நரசிம்மராவ் இது தொடர்பாக கூறியதாவது:-

    சித்துவின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒவ்வொரு தென் இந்தியர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். சித்துவையும் மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும். மேலும் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இம்ரான்கான் பதவியேற்பு விழாவில் பங்கேற்று அந்நாட்டு ராணுவ தளபதியை கட்டியணைத்து சித்து ஏற்கனவே சர்ச்சையில் சிக்கி இருந்தார். தற்போது அவர் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். #BJP #PakistanCabinet

    பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு, 6 புதிய மந்திரிகள் பதவியேற்றுள்ளனர். #PakistanCabinet #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பாராளுமன்றத் தேர்தலில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி (பிடிஐ) அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. இம்ரான் கான் பிரதமராக பதவியேற்றார். அதன்பின்னர் அவரது அமைச்சரவையில் 15 பேர் மந்திரிகளாகவும், 5 பேர் ஆலோசகர்களாகவும் நியமிக்கப்பட்டு பதவியேற்றனர்.

    இந்நிலையில், இம்ரான் கான் தனது அமைச்சரவையை இன்று விரிவாக்கம் செய்து, 6 பேரை இணைத்துள்ளார். புதிய மந்திரிகள் பதவியேற்பு விழா, ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. மத்திய மந்திரிகளாக உமர் அயூப், அலி முகமது கான் மெஹர் மற்றும் சையத் அலி ஹைதர் ஜைதி ஆகியோர் மத்திய மந்திரிகளாக பதவியேற்றனர். முகமது ஷபிர் அலி, முராத் சயீத் மற்றும் முகமது ஹமத் அஸார் ஆகியோர் இணை மந்திரிகளாக பதவியேற்றனர். அவர்களுக்கு ஜனாதிபதி ஆரிப் ஆல்வி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    விழாவில் பிரதமர் இம்ரான் கான், மத்திய மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இன்று பதவியேற்ற மந்திரிகளில் உமர் அயூப் கான், இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பிடிஐ கட்சியில் சேர்ந்தார். இதற்கு முன்பு, சவுகத் அஜீஸ் அமைச்சரவையில் நிதித்துறை இணை மந்திரியாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. #PakistanCabinet #ImranKhan
    பாகிஸ்தானில் இம்ரான் கான் மந்திரிசபையில் இடம்பெற்றுள்ள 16 மந்திரிகள் மற்றும் பிரதமருக்கான 5 ஆலோசகர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டனர். #PakistanCabinet #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, கூடுதல் இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக வந்தது. எனவே, சிறிய கட்சிகளின் ஆதரவுடன் அந்தக் கட்சி பாகிஸ்தானில் கூட்டணி அரசு அமைத்துள்ளது.

    இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில், பாகிஸ்தானின் 22-வது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி மம்னூன் உசேன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதன்பின்னர் 21 பேர் அடங்கிய தனது மந்திரிசபையை இம்ரான் கான் அறிவித்தார். இதில் 16 பேர் மத்திய மந்திரிகள்; 5 பேர் பிரதமரின் ஆலோசகர்கள்,  பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை மந்திரியாக பர்வேஸ் கட்டாக், நிதி மந்திரியாக ஆசாத் உமர் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரியாக ஷா மெஹ்முது குரேஷி ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.



    இந்நிலையில் இம்ரான் கான் தலைமையிலான மந்திரிசபை பதவியேற்பு விழா இன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. இம்ரான் கான் முன்னிலையில் புதிய மந்திரிகளுக்கு ஜனாதிபதி மம்னூன் உசைன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    தற்போது பதவியேற்றுள்ள மந்திரிகளில் பெரும்பாலானவர்கள் முஷாரப் ஆட்சிக்காலத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    பதவியேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய நிதிமந்திரி உமர், நடப்பு கணக்கு பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகளை உடனே சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார். அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க நீண்டகால நடவடிக்கைகள் எடுக்கப்போவதாகவும் கூறினார். நாட்டில் அமைதியை ஏற்படுத்த இரவு பகலாக பாடுபடப்போவதாக பாதுகாப்புத்துறை மந்திரி கட்டாக் தெரிவித்தார். #PakistanCabinet #ImranKhan

    ×