search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "optimistic"

    • முக்கிய மூலப்பொருளான பஞ்சு விலை சீராக இல்லாததால், நூல் விலை அடிக்கடி உயர்கிறது.
    • தீபாவளி உள்ளிட்ட பண்டிகை ஆர்டர்கள் கைகொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    திருப்பூர்:

    கடந்த ஓராண்டாக ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.பஞ்சு விலை சீராக இல்லாத நிலையில் வியாபாரிகள் இருப்பு வைத்து பஞ்சு விற்பனை செய்வது வழக்கத்தில் உள்ளது.இருப்பினும் விலை குறைவாக இருக்கும் போது பஞ்சை வாங்கி இருப்பு வைத்து செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தி விலையை உயர்த்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.

    முக்கிய மூலப்பொருளான பஞ்சு விலை சீராக இல்லாததால், நூல் விலை அடிக்கடி உயர்கிறது. உற்பத்தியை சீராக செய்ய முடியாமல், உள்நாடு மற்றும் ஏற்றுமதி பின்னலாடை உற்பத்தியாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.கடந்த சில மாதங்களாக, நூல் விலை காரணமின்றி உயர்வதால், தீபாவளி பண்டிகை ஆர்டர் கையை கடித்துவிடுமோ என்ற அச்சம் நிலவியது.

    அக்டோபர் 1 முதல் 2023-24ம் பருத்தி ஆண்டு துவங்கியுள்ளது. விரைவில் இந்திய பருத்தி கழகம் ஆலோசனை செய்து நடப்பு ஆண்டுக்கான அறிக்கையை வெளியிட உள்ளனர்.வழக்கமாக பருத்தி சீசனில் வரத்து அதிகரித்து விலை சீராக இருக்கும். இனிவரும் சில மாதங்களுக்கு, நூல் விலையிலும் ஏற்றம் இருக்காது என, உற்பத்தியாளர் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

    கடந்த 2 மாதங்களாக, 15 நாட்கள் இடைவெளியில் நூல் விலை உயர்ந்தது. தற்போது நூல் விலையில் மாற்றம் இல்லையென, முன்னணி நூற்பாலைகள் அறிவித்துள்ளன. இதன் மூலம் இனிவரும் சில மாதங்களுக்கு, நூல் விலையில் உயர்வு இருக்காது என்று பின்னலாடை உற்பத்தியாளர்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.

    இதனால் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை ஆர்டர்கள் கைகொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். 

    ×