search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Operation of buses"

    • கமுதி அருகே உள்ள கீழவலசை கிராமத்துக்கு முதல் முதலாக பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் ராஜகண்ணப்பன் பஸ் வசதி செய்து தர ஏற்பாடு செய்தார்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பேரையூர் ஊராட்சி கீழவலசை கிராமத்திக்கு சுதந்திர பெற்ற காலத்தில் இருந்து பஸ் வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இது குறித்து கீழவலசை கிராம மக்கள் முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான ராஜ கண்ணப்பனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று அமைச்சர் ராஜகண்ணப்பன் உடனடியாக அதிகாரியிடம் பேசி கீழவலசை கிராமத்திற்கு பஸ் வசதி செய்து தர ஏற்பாடு செய்தார்.

    அதன்படி கீழவலசை கிராமத்திற்கு முதன்முதலாக அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது. இதன் தொடக்க விழாவிற்கு முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல், மாவட்ட கவுன்சிலர் பெருநாழி போஸ் சசிகுமார், பேரையூர் ஊராட்சி மன்ற தலைவர் ரூபி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் பாண்டி, ஒன்றிய துணை செயலாளர் நேதாஜி சரவணன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பசும்பொன் தனிக்கொடி, ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, புதுக்கோட்டை முத்துராமலிங்கம், கமுதி வட்டார காங்கிரஸ் தலைவர் பழக்கடை ஆதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடைகள் இல்லாமல் திண்டாட்டம்
    • மர்ம நபர்கள் பொருட்களை சேதப்படுத்துவதாக புகார்

    வேலூர்:

    வேலூர் புதிய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.52 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது. இதனை கடந்த ஜூன் மாதம் 29-ந் தேதி முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    அப்போது சென்னை மார்க்கமாக செல்லும் பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தது. இதையடுத்து காஞ்சிபுரம், திருத்தணி மார்க்கமாக பஸ்கள் இயக்கப்பட்டன.

    இந்த நிலையில் புதிய பஸ் நிலையத்தில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் மது அருந்துவதாகவும் பொருட்களை சேதப்படுத்துவதாகவும் புகார்கள் வந்தது.

    இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் அசோக் குமார் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். அப்போது பஸ் நிலைய கழிவறையில் கண்ணாடி உடைந்திருந்தது. அதை மாற்றவும் தெர்மல் கட்டிடத்தில் உள்ள கழிவறைகளை பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இன்று காலை முதல் குடியாத்தம், பேர்ணாம்பட்டு, கே.ஜி.எப், திருப்பத்தூர், சேலம், தர்மபுரி, ஓசூர், பெங்களூர், சித்தூர், திருப்பதி ஆகிய மார்க்கங்களில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    குறைந்த அளவு பஸ்கள் இயக்கப்பட்டு வந்ததால் வெறிச்சோடி கிடந்த புதிய பஸ் நிலையம் இன்று காலை முதல் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருவதால் பரபரப்பாக காணப்படுகிறது.

    புதிய பஸ் நிலையத்தில் கட்டப்பட்ட கடைகள் திறக்கப்படாததால் பயணிகள் குடிநீர், டீ, காபி, பிஸ்கட், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர்.

    எனவே புதிய பஸ் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ஆரணி, திருவண்ணாமலை வழித்தடத்தில் செல்லும் பஸ்கள் பழைய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

    ×