search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ministerial action"

    • கமுதி அருகே உள்ள கீழவலசை கிராமத்துக்கு முதல் முதலாக பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் ராஜகண்ணப்பன் பஸ் வசதி செய்து தர ஏற்பாடு செய்தார்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பேரையூர் ஊராட்சி கீழவலசை கிராமத்திக்கு சுதந்திர பெற்ற காலத்தில் இருந்து பஸ் வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இது குறித்து கீழவலசை கிராம மக்கள் முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான ராஜ கண்ணப்பனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று அமைச்சர் ராஜகண்ணப்பன் உடனடியாக அதிகாரியிடம் பேசி கீழவலசை கிராமத்திற்கு பஸ் வசதி செய்து தர ஏற்பாடு செய்தார்.

    அதன்படி கீழவலசை கிராமத்திற்கு முதன்முதலாக அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது. இதன் தொடக்க விழாவிற்கு முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல், மாவட்ட கவுன்சிலர் பெருநாழி போஸ் சசிகுமார், பேரையூர் ஊராட்சி மன்ற தலைவர் ரூபி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் பாண்டி, ஒன்றிய துணை செயலாளர் நேதாஜி சரவணன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பசும்பொன் தனிக்கொடி, ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, புதுக்கோட்டை முத்துராமலிங்கம், கமுதி வட்டார காங்கிரஸ் தலைவர் பழக்கடை ஆதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வீடு வாடகைக்கு எடுத்து அங்கு மக்களை சந்தித்து குறைகேட்டு வந்தார்.
    • பெரும்பாலான மக்கள் அங்கு வந்து அமைச்சரை சந்திக்க சிரமம் ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    அமைச்சர் நமச்சிவாயம் தனது தொகுதியான மண்ணாடிப்பட்டில் மக்களை சந்திக்க கொ.மணவெளியில் வீடு வாடகைக்கு எடுத்து அங்கு மக்களை சந்தித்து குறைகேட்டு வந்தார்.

    பெரும்பாலான மக்கள் அங்கு வந்து அமைச்சரை சந்திக்க சிரமம் ஏற்பட்டது. இதனால் காட்டேரிக்குப்பத்தில் ஒரு எம்.எல்.ஏ. அலுவலகமும், திருக்கனூரில் ஒரு எம்.எல்.ஏ.அலுவலகம் திறந்து மக்கள் பணியாற்ற முடிவு செய்தார். காட்டேரிகுப்பத்தில் கொம்யூன் பஞ்சாயத்துக்கு சொந்தமான இடத்தில் அரசின் எம்.எல்.ஏ. அலுவல கமும், திருக்கனூரில் சொந்த செலவில் தனியார் இடத்தில் ஒரு எம்.எல்.ஏ. அலுவலகத்தை தேர்வு செய்து அமைச்சர் பார்வையிட்டார்.

    இதுகுறித்து அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-

    தொகுதி மக்கள் கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்துஎன்னை சந்திக்க சிரமப்படுவநைத அறிந்தேன். எனவே தொகுதி மக்கள் எளிமையாக என்னை சந்திக்க 2 அலுவலகம் அமைக்க ஏற்பாடு செய்துள்ளேன். வாரம் 2 நாட்கள் இங்கு வந்து மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளேன் என தெரிவித்தார்.

    ×